News November 8, 2024

பம்பைக்கு 60 நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு, மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலத்தில், லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வது வழக்கம். அவ்வாறு செல்லும் பக்தர்களின் வசதிக்காக, வரும் நவம்பர் 15ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி வரை கோயம்பேடு, கிளாம்பாக்கம், திருச்சி, மதுரை மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்து பம்பைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து மேலாண்மை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 9, 2025

செங்கல்பட்டு: உங்களுடன் ஸ்டாலின் முகாம் விபரம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் தாம்பரம், நந்திவரம்-கூடுவாஞ்சேரி, காட்டாங்குளத்தூர், திருப்போரூர், செயின்ட் தாமஸ் மவுண்ட் பகுதிகளில் நடைபெற உள்ளது. முழுமையான முகவரியை தெரிந்து கொள்ள இங்கு <>கிளிக்<<>> செய்யவும். இந்த முகாமில் மகளிர் உரிமை தொகை, முதியோர் ஓய்வூதியம் போன்ற அரசின் சேவைகளில் குறை இருந்தால் மனுவாக அளித்து 45 நாட்களில் தீர்வு பெறலாம். ஷேர் பண்ணுங்க.

News August 8, 2025

செங்கல்பட்டின் ஆன்மீக ட்ரெக்கிங் ஸ்பாட்

image

செங்கல்பட்டு மாவட்டம் பழவேலி அருகே உள்ளது குபேரகிரி மலை. மலைக்கு மேலே மகாகாளிங்கராய ஈஸ்வரர் கோயில் உள்ளது. மலை உச்சியில் சிறிய சிவலிங்கம் மட்டும் உள்ள நிலையில், மலையின் உச்சியில் இருந்து அழகான காட்சியுடன் ஒரு அற்புதமான மலையேற்ற அனுபவம் தரும் கோயிலாக இது உள்ளது. மக்கள் இங்கு கிரிவலம் செல்கின்றனர். ட்ரெக்கிங் போக நல்ல இடம். மிஸ் பண்ணாம போயிட்டு வாங்க. ஷேர் பண்ணுங்க

News August 8, 2025

கரும்பு நடவு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

image

மதுராந்தகம் சர்க்கரை ஆலைக்கு 2025-26 பருவத்தில் கரும்பு நடவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏக்கருக்கு ரூ.7,450 மானியம் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். அகலபாருடன் கூடிய பரு சீவல் நாற்று நடவுக்கு இந்த மானியம் வழங்கப்படும். 2024-25ம் ஆண்டு 937 விவசாயிகளுக்கு ரூ.2.44 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. விவசாயிகள் கரும்பு நடவிற்கு முன்வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!