News March 21, 2026
பனை தொழிலாளர்களா, பயங்கரவாதிகளா? சீமான்

கள் இறக்கிய பனை தொழிலாளர்களை பயங்கரவாதிகள் போல உள்ளாடையுடன் திருச்சி போலீஸார் சிறையில் அடைத்திருப்பது கொடுங்கோன்மை என சீமான் கண்டித்துள்ளார். கள்ளை முறையான ஆய்வுக்கு உட்படுத்தாமல் நச்சு கலந்த கள் என போலீஸ் கூறுவதில் இருந்தே முற்றிலும் இது புனையப்பட்ட நாடகம் என்பது உறுதியாகிறது. நாட்டின் பல மாநிலங்களில் கள் இறக்க தடை இல்லாதபோது, TN-ல் மட்டும் தடை எதற்கு எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Similar News
News April 3, 2026
என் மீது அவர்களுக்கு பொறாமை: ரஹானே

SRH அணியுடன் நேற்று நடந்த போட்டியில் குறைந்த ரன்கள் எடுத்ததால் ரஹானே மீது விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் அதுகுறித்து பேசிய அவர், 2023 முதல் தன்னிடம் சிறந்த ஸ்டிரைக் ரேட் இருப்பதாக கூறியுள்ளார். தன்னை விமர்சிப்பவர்கள் அநேகமாக தனது ஆட்டத்தை பார்த்திருக்க மாட்டார்கள் அல்லது அவர்களுக்கு உள்நோக்கம் இருந்திருக்கலாம் எனவும், தனது வெற்றியைக் கண்டு அவர்களுக்கு பொறாமை என்றும் பேசியுள்ளார்.
News April 3, 2026
இந்து மக்களுக்கு பாதுகாப்பான கட்சி திமுக: கனிமொழி

PTR-ஐ ஜெயிக்க வேண்டும் என்பதற்காகதான் எதிர்க்கட்சியினர் மதுரை மத்திய தொகுதிக்கு சம்பந்தமே இல்லாத வேட்பாளரை(சுந்தர்.சி) நிறுத்தி இருப்பதாக கனிமொழி விமர்சித்துள்ளார். PTR-க்காக வாக்கு சேகரிக்க சென்ற அவர், திமுக கோயில் நிலங்களை மீட்டு எடுத்திருப்பதாக கூறினார். மேலும், இந்துக்களை பாதுகாப்பதாக கூறும் கட்சிகள் இதை செய்யவில்லை எனவும், இந்து மக்களுக்கு பாதுகாப்பான கட்சி திமுகதான் என்றும் பேசியுள்ளார்.
News April 3, 2026
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹800 உயர்ந்தது

தங்கம் விலை இன்று (ஏப்.3) சவரனுக்கு ₹800 உயர்ந்து மக்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. 1 கிராம் ₹100 உயர்ந்து ₹13,850-க்கும், 1 சவரன் ₹800 அதிகரித்து ₹1,10,800-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையிலும் தங்கம் விலை உயர்ந்து வருவதால், வரும் நாள்களிலும் விலை அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


