News May 26, 2024

“பனை ஓலையில் உயிா் ஓவியக் கண்காட்சி”

image

மதுரை, சிக்கந்தா்சாவடியில் உள்ள வேளாண் உணவுத் தொழில் வா்த்தக மையத்தில் “பனை ஓலையில் உயிா் ஓவியக் கண்காட்சி”, விற்பனை தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.
ஆன்மிகம், இயற்கை, வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் அடங்கிய பனை ஓலையில் தீட்டப்பட்ட சுமாா் 300-க்கும் மேற்பட்ட ஓவியங்கள் கண்காட்சியில் இடம் பெற்றன.
இக்கண்காட்சி வருகிற புதன்கிழமை (மே.29) வரை நடைபெறுகிறது.

Similar News

News July 10, 2025

குமரி – ஹைதராபாத் சிறப்பு ரயில் வழித்தட மாற்றம்

image

மதுரை கோட்டத்தில் நடைபெற்று வரும் பொறியியல் பணிகள் காரணமாக, ஜூலை 11 அன்று காலை 05:15 மணிக்கு புறப்படும் குமரி-ஹைதராபாத் சிறப்பு ரயில் (07229) மதுரை, கொடைக்கானல் சாலை மற்றும் திண்டுக்கல்லில் நிற்காமல் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி மற்றும் திருச்சிராப்பள்ளி வழியாக இந்த ரயில் திருப்பி விடப்படும். அருப்புக்கோட்டை, மானாமதுரை சந்திப்பு, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டையில் நின்று செல்லும்.

News July 10, 2025

குமரி – ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மாற்றம்

image

ஜூலை.12 அன்று காலை 05:50 மணிக்குப் புறப்படும் கன்னியாகுமரி-ஹவுரா அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில் எண் (12666) மதுரை கோட்டத்தில் பொறியியல் பணிகள் காரணமாக மதுரை மற்றும் திண்டுக்கல்லை தவிர்த்து விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி மற்றும் திருச்சிராப்பள்ளி வழியாக திருப்பி விடப்படும். மாற்று நிறுத்தங்கள் அருப்புக்கோட்டை மற்றும் சிவகங்கை ஆகியவை அடங்கும்.

News July 10, 2025

மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

மதுரை மாவட்டத்தில் இன்று (09.07.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!