News April 21, 2025
பனப்பாக்கத்தில் மர்மமான முறையில் முதியவர் சாவு

பனப்பாக்கம் காந்தி சிலை அருகில் நேற்று, 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். நெமிலி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் திருத்தணியை சேர்ந்த ராஜேந்திரன் என்பது தெரிந்தது. இவர் எப்படி இறந்தார் என போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News November 12, 2025
அரக்கோணத்தில் போலி சான்றிதழ்!

ராணிப்பேட்டை: அரக்கோணம் மத்திய தொழிற் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்வாகும் ஆண், பெண் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்நிலையில், அசாம் மாநிலத்தில் இருந்து தேர்வான சர்ஜீத்(23) என்பவரய்து சான்றிதழ்களில் இருப்பிட சான்றிதழ் போலி என்பது தெரியவந்தது. இதுகுறித்து தக்கோலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
News November 12, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 12, 2025
ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பூர்த்தி செய்யப்பட்ட சிறப்பு தீவிர திருத்தம் 2026 கணக்கீட்டு படிவங்களை வாக்காளர்களிடமிருந்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் பெறப்படும் போது கைபேசியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர் செயலியில் பதிவேற்றம் செய்வது தொடர்பாக ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டம் ஆட்சியர் சந்திரகலா தலைமையில் இன்று (நவ.11) நடத்தப்பட்டு பயிற்சி வழங்கப்பட்டது.


