News March 24, 2024

பந்தலூர்: வனப்பகுதியில் பற்றி எரிந்த தீ

image

பந்தலூர் அருகே கோட்டப்பாடி பகுதிகளில் வனப்பகுதி உள்ளது. தற்போது நிலவும் காலநிலை மாற்றத்தால் வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டு உள்ளது. இதனால் செடி கொடிகளும் காய்ந்த நிலையில் உள்ளன. திடீரென சேரம்பாடி வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது. இதுபற்றி அறிந்ததும் பிதிர்காடு வனச்சரகர் ரவி, வனவர் பெலிக்ஸ், வனகாப்பாளர் கோபு மற்றும் வனத்துறையினர் அங்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Similar News

News January 25, 2026

நீலகிரி மக்களுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

நீலகிரி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும், நாளை குடியரசு தினத்தை முன்னிட்டு, கிராமசபைக் கூட்டம் காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. கிராம ஊராட்சிகளில் வசிக்கும் பொதுமக்கள் தவறாமல் இந்த இந்த கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 25, 2026

முதுமலையில் பெண் யானை உயிரிழப்பு

image

முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு வனச்சரகத்திற்கு உட்பட்ட காப்பு காட்டுப் பகுதியில் வனப் பணியாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அங்கு பெண் யானை ஒன்று உயிரிழந்த நிலையில் இருப்பதை கண்டனர். இதனையடுத்து வனத்துறை உயர் அதிகாரிகள் முன்னிலையில் யானையின் உடல் கூர் ஆய்வு செய்யப்பட்டது. அதன் பிறகு, அதே இடத்திலேயே யானையின் உடல் புதைக்கப்பட்டது.

News January 24, 2026

நீலகிரி: What’s App பண்ணுங்க.. உடனே தீர்வு

image

நீலகிரி மக்களே, மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்குகிறது. இந்த எண்ணுக்கு 72177 11814 போனில் இருந்து மெசேஜ் அனுப்பினால் போதும். உங்கள் (சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு) போன்றவைகளுக்கு இலவசமாக சட்ட ஆலோசனை பெறலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க

error: Content is protected !!