News March 24, 2024

பந்தலூர்: வனப்பகுதியில் பற்றி எரிந்த தீ

image

பந்தலூர் அருகே கோட்டப்பாடி பகுதிகளில் வனப்பகுதி உள்ளது. தற்போது நிலவும் காலநிலை மாற்றத்தால் வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டு உள்ளது. இதனால் செடி கொடிகளும் காய்ந்த நிலையில் உள்ளன. திடீரென சேரம்பாடி வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது. இதுபற்றி அறிந்ததும் பிதிர்காடு வனச்சரகர் ரவி, வனவர் பெலிக்ஸ், வனகாப்பாளர் கோபு மற்றும் வனத்துறையினர் அங்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Similar News

News April 17, 2025

நீலகிரி: சிறுமிக்கு பாலியல் தொல்லை

image

கோத்தகிரி அருகே உள்ள ஒரு கிராமத்தில், சமவெளிப் பகுதியை சேர்ந்த கணவன் மனைவி தங்கி கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், அவர்களின் 11 வயது மகளிடம், அப்பகுதியில் இருந்த முகேஷ் குமார்(23) என்ற வட மாநில தொழிலாளி, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், போலீசார் முகேஷ் குமாரை, போக்சோவில் கைது செய்தனர்.

News April 16, 2025

ஜிப்லிக்கு நோ சொல்லுங்க: சைபர் கிரைம் எச்சரிக்கை!

image

நீலகிரி மக்களே, ஜிப்லி(Ghibli) புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இதில் நீங்கள் பதிவேற்றம் செய்யும் புகைப்படங்களை டீப் ஃபேக் (Deep fake) தொழில்நுட்பத்தில் பயன்படுத்தி தவறாக சித்தரிக்கப்படும் அபாயம் உள்ளதாக போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சைபர் க்ரைம் குற்றங்களுக்கு 1930 என்ற எண்ணை அழைக்கவும். இதை ஷேர் பண்ணுங்க! உங்க நண்பர்களும் Ghibli ஆபத்தை தெரிஞ்சுக்கட்டும்.

News April 16, 2025

நீலகிரியில் ரூ.15,000 சம்பளம்!

image

நீலகிரி மாவட்டத்தில் பட்டதாரி படிப்பு முடித்த இளைஞர்களுக்கு பிரபல தனியார் நிதி நிறுவனத்தில் உடனடி வேலை வாய்ப்புள்ளது. ஊட்டி, கூடலூர் போன்ற இடங்களில் இதற்கான பணியிடம் இருக்கக் கூடும். இந்த வேலைக்கு முன் அனுபவம் அவசியம் இல்லை. நடப்பாண்டில் படித்து முடித்த பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம். ரூ.15000 வரை சம்பளம். இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு<> இங்கே கிளிக் பண்ணுங்க!<<>>

error: Content is protected !!