News March 24, 2024
பந்தலூர்: வனப்பகுதியில் பற்றி எரிந்த தீ

பந்தலூர் அருகே கோட்டப்பாடி பகுதிகளில் வனப்பகுதி உள்ளது. தற்போது நிலவும் காலநிலை மாற்றத்தால் வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டு உள்ளது. இதனால் செடி கொடிகளும் காய்ந்த நிலையில் உள்ளன. திடீரென சேரம்பாடி வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது. இதுபற்றி அறிந்ததும் பிதிர்காடு வனச்சரகர் ரவி, வனவர் பெலிக்ஸ், வனகாப்பாளர் கோபு மற்றும் வனத்துறையினர் அங்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
Similar News
News October 27, 2025
பார்சலில் உணவு வழங்கினால் கடும் நடவடிக்கை!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள அம்மா உணவகத்தில் ஒரு ரூபாய்க்கு இட்லி வாங்கி ஹோட்டலுக்கு பத்து ரூபாய்க்கு விற்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் குன்னூர் நகராட்சி கமிஷனர் இளம் பரிதி கூறுகையில் “குன்னூர் அம்மா உணவகத்தில் பார்சலில் உணவு வாங்குவது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட நபர் மீதும், பார்சல் வழங்கும் ஊழியர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
News October 27, 2025
நீலகிரி: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

நீலகிரி மாவட்டத்தில் உதகை நகரம் , உதகை ஊரகம் உட்கோட்டம் , குன்னூர் உட்கோட்டம் , கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் பகுதிகளில் இன்று காவல்துறையினர் இரவு ரோந்து பணியில் ஈடுபடவுள்ளனர். அதில் இடம்பெற்றுள்ள அதிகாரிகள், மொபைல் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 0423 2444111 மற்றும் அவசர உதவிக்கு 100 அறிவிக்கப்பட்டுள்ளது.
News October 26, 2025
அறிவித்தார் நீலகிரி கலெக்டர்

நீலகிரியில் நகராட்சி (ம) பேரூராட்சிகளில் சிறப்பு வார்டு கூட்டம் நாளை(அக்.27) முதல் துவங்கி 3 நாட்களுக்கு நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் தங்களது வார்டு பகுதியில் அடிப்படை தேவைகளான குடிநீர் விநியோகம், திடக்கழிவு மேலாண்மை, தெருவிளக்கு பராமரிப்பு, சாலை பழுதுகள், பூங்காக்கள் பராமரிப்பு மற்றும் மழைநீர் வடிகால் பராமரிப்பு போன்றவற்றில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் கோரிக்கை வைக்கலாம். (SHARE)


