News September 26, 2025
பந்தலூர் கூடலூரில் 1மணி நேரம் கனமழை!

தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை முடியும் நிலையில், இன்று பந்தலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரம் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவர்கள் மழையில் நனைந்து சிரமப்பட்டனர். பல இடங்களில் ஆட்டோக்கள் ஓடாததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மழையால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.
Similar News
News January 29, 2026
நீலகிரி அருகே கொந்தளித்த மக்கள்

நீலகிரி மாவட்டம் தோவாலாவை அடுததுள்ள பொன்னூர் கிராமத்தில்
200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன. இருப்பினும் இப்பகுதில் முறையான சாலை, குடிநீர் வசதி செய்து தரவில்லை என மக்கள் குற்றம் சாட்டி பந்தலூரில் அமைந்துள்ள நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு நகராட்சி கமிஷினர் சக்தி வேலுவிடம் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர்.
News January 29, 2026
நீலகிரி மாவட்ட காங்கிரஸ் புதிய தலைவர் பதவி ஏற்பு

நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக டி. நாகராஜன் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் உதகையில் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்திற்கு வந்தார். முன்னாள் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆர் .கணேஷ் எம்.எல்.ஏவுக்கு மாலை அணித்து வாழ்த்து பெற்று, மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பேற்று கொண்டார். ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள், டி. நாகராஜுக்கு சால்வை அணிவித்து வாழ்த்தினார்கள்.
News January 29, 2026
நீலகிரி மாவட்ட காங்கிரஸ் புதிய தலைவர் பதவி ஏற்பு

நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக டி. நாகராஜன் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் உதகையில் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்திற்கு வந்தார். முன்னாள் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆர் .கணேஷ் எம்.எல்.ஏவுக்கு மாலை அணித்து வாழ்த்து பெற்று, மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பேற்று கொண்டார். ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள், டி. நாகராஜுக்கு சால்வை அணிவித்து வாழ்த்தினார்கள்.


