News March 20, 2025

பத்திர பதிவுத் துறையில் முறைகேடு – எதிர்கட்சி தலைவர்

image

புதுச்சேரியில் நேற்று பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் சிவா பேசியதாவது:- தமிழகத்தை போல சிபிஎஸ்இ பாடத்திட்டத்தையும் எடுத்துவிட்டால் நன்றாக இருக்கும். இரயில், துறைமுகம் ஆகியவை நம் கையில் இருந்தால் வளர்ச்சி இருக்கும் என்று தெரிவித்தார். மேலும், பத்திர பதிவுத் துறையில் கோடி கணக்கில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டினார்.

Similar News

News March 20, 2025

புதுவை: ஹெல்மெட் அணியாத 37,107 பேருக்கு அபராதம்

image

சட்டப்பேரவையில் அமைச்சர் நமச்சிவாயம் பேசுகையில், ஒவ்வொரு குடிமகனும், பைக் ஓட்டும்போது ஹெல்மெட் அணிய வேண்டும். ஹெல்மெட் அணிவதை வலியுறுத்தி அரசு பிரசாரமும் தொடங்கியுள்ளது. இதுவரை புதுவையில் ஹெல்மெட் அணியாத 37,107 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் உச்சநீதிமன்றம் விபத்து மரணத்தை கண்காணித்து கேட்கிறது. இதனால் புதுவையில் மக்கள் அவசியம் தலைகவசம் அணிய வேண்டும் என பதில் அளித்தார்.

News March 20, 2025

நிறுத்தப்பட்ட கேஸ் மானியம் மீண்டும் வழங்கப்படும்

image

புதுச்சேரி சிவப்பு மற்றும் மஞ்சள் நிற அட்டைதாரர்களுக்கு நிறுத்தப்பட்ட கேஸ் மானியம் மீண்டும் வழங்கப்படும் என்று அமைச்சர் திருமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் அடுத்த மாதத்தில் இருந்து அனைத்து சிவப்பு மற்றும் மஞ்சள் நிற அட்டைதாரர்களுக்கு மானியம் வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

News March 20, 2025

புதுவை மஞ்சள் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.1000 உதவித் தொகை

image

புதுச்சேரியில் சட்டப்பேரவைக் கூட்டம் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் தலைமையில் புதன்கிழமை காலை தொடங்கியது. அப்பொழுது பேசிய முதல்வர் என்.ரங்கசாமி, புதுவையில் இலவச அரிசியுடன் 2 கிலோ கோதுமை வழங்கப்படும். சிவப்பு குடும்ப அட்டையுள்ள குடும்ப தலைவியருக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை வழங்குவது போல, மஞ்சள் குடும்ப அட்டைதாரா்களுக்கும் மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்றார்.

error: Content is protected !!