News March 19, 2025
பத்தாயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

செங்கல்பட்டு அருங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் தேன்மொழி.இவர் கடந்த 11-ந்தேதி தனது நிலத்திற்கு இலவச பட்டா பெறுவதற்கு வி.ஏ.ஓ சக்குபாய் என்பவரை அணுகியுள்ளார்.ஆனால் சக்குபாய் ரூ.10,000 லஞ்சம் கேட்டுள்ளார்.இது குறித்து தேன்மொழி லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்தார்.அதன்படி ரசாயனம் தடவிய பணத்தை பெற்ற வி.ஏ.ஓ சக்குபாய் மற்றும் உதவியாளர் சரவணன் ஆகிய இருவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
Similar News
News September 14, 2025
செங்கல்பட்டு அருகே கார் மோதி இளைஞர் பலி

மறைமலைநகர் அருகே உள்ள கோகுலாபுரத்தைச் சேர்ந்தவர் லதாராம் (28). இவர் தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார். நேற்று இரவு பணி முடித்து விட்டு ஜி.எஸ்.டி. சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கிச் சென்ற அடையாளம் தெரியாத கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாம்பரம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 14, 2025
செங்கல்பட்டு: தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கை

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விண்ணப்பிக்கும் கால அவகாசம் செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் சேரும் மாணவர்களுக்கு கல்வி கட்டணம் இல்லை, மாதந்தோறும் உதவித்தொகை மற்றும் விலையில்லா மிதிவண்டி, விலையில்லா சீருடை, விலையில்லா காலணி, கட்டணமில்லா பேருந்து வசதி வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு செங்கல்பட்டு அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை நேரடியாக அணுகலாம்.
News September 14, 2025
செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி விவரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (செப்-13) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.