News March 26, 2025

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு – 16,412 பேர் எழுதுகின்றனர்

image

பத்தாம் வகுப்பு அரசு பொத்தேர்வுகள் நாளை மறுநாள் (மார்ச்.28) துவங்க உள்ள நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் 16,412 பேர் தேர்வு எழுத உள்ளனர். இதற்காக 82 மையங்களில் அடிப்படை வசதிகளுடன் முன்னேற்பாடுகள் நடக்கின்றன. 860 பேர் தேர்வு அறை கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு காலை 10 முதல் மதியம் 1:15 மணி வரை நடக்கிறது. 24 மணி நேரம் சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

Similar News

News March 29, 2025

பாம்பன் புதிய பாலத்திற்கு அப்துல் கலாம் பெயர் சூட்டுக – தேமுதிக

image

பாம்பனில் புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய செங்குத்து ரயில் பாலத்தை வருகிற ஏப்.06-ல் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க இருக்கிறார். ராமேஸ்வரத்தில் பிறந்து வளர்ந்து ராமேஸ்வரத்திற்கு அடையாளமாக இருக்கும் முன்னாள் குடியரசு தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் பெயரை புதிய ரயில் பாலத்திற்கு சூட்ட வேண்டுமென தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

News March 29, 2025

அட இவங்க எல்லாம் இராம்நாடா.?

image

அப்துல் கலாம் – முன்னாள் குடியரசுத் தலைவர், விஞ்ஞானி. கமல்ஹாசன் – புகழ்பெற்ற நடிகர். விக்ரம் – புகழ்பெற்ற நடிகர். குலாம் ராசிக் – இலங்கை கிரிக்கெட் வீரர். வேல ராமமூர்த்தி – குணச்சித்திர நடிகர். ராஜ்கிரண் – பழம்பெரும் நடிகர். மாலினி ஜீவரத்தினம் – ஆவணப்பட இயக்குனர். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் – அரசியல் மற்றும் ஆன்மீகவாதி. தியாகி இமானுவேல் சேகரன் – ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய தலைவர்.

News March 29, 2025

429 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்

image

உலக தண்ணீர் தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 429 ஊராட்சிகளில் இன்று (மார்ச்.23) காலை 11 மணிக்கு கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் உலக தண்ணீா் தினத்தின் கருப்பொருள், கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீா் விநியோகம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதில் மக்கள் கலந்து கொள்ள ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அழைப்பு விடுத்துள்ளார்.

error: Content is protected !!