News August 21, 2025
பண மோசடி குறித்து நெல்லை காவல் துறை எச்சரிக்கை

வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறி, பிக்சட் டெபாசிட் மற்றும் கடன்கள் தொடர்பான OTP விவரங்களைக் கேட்கும் மோசடி அழைப்புகள் அதிகரித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். அறிமுகமில்லாத எண்களில் இருந்து வரும் இத்தகைய அழைப்புகளுக்கு எந்த தகவலையும் அளிக்க வேண்டாம் என்றும், உடனடியாக அழைப்பை துண்டித்துவிட்டு, அருகில் உள்ள வங்கிக்கு நேரடியாக சென்று உறுதி செய்ய வேண்டும் என்றும் நெல்லை SP சிலம்பரசன் எச்சரித்துள்ளார்.
Similar News
News November 12, 2025
நெல்லை: வாக்காளர் பெயர் சேர்க்க முக்கிய அறிவிப்பு!

நெல்லை மக்களே, வாக்காளர் படிவத் திருத்தங்களுக்காக வீடு வீடாக SIR படிவம் உங்க பகுதில வழங்கும் போது நீங்க வீட்ல இல்லையா? உங்க ஓட்டு பறிபோயிடும்ன்னு கவலையா? அதற்கு ஒரு வழி இருக்கு. இங்கு <
News November 12, 2025
நெல்லை: மாடியில் இருந்து விழுந்து வாலிபர் பலி

முக்கூடல் காந்தி தெருவை சேர்ந்த நிராஜ் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டு மாடியில் நண்பர்களுடன் மது அருந்தி உள்ளார். இந்நிலையில் அவர் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து தலையில் பலத்த காயத்துடன் கிடந்துள்ளார். பாப்பாக்குடி போலீசார் நிராஜை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
News November 12, 2025
நெல்லை ரயில்கள் 3 நாட்களுக்கு ரத்து

நெல்லை ரயில் நிலையத்தில் கூடுதல் நடைமேடை அமைக்கும் பணிக்காக திருச்செந்தூரில் இருந்து காலை 10.10 மணிக்கு நெல்லைக்கு புறப்படும் பயணிகள் ரயிலானது வரும் 13, 14 மற்றும் 15 ஆகிய 3 நாட்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு இரயில்வே அறிவத்துள்ளது. மேலும், செங்கோட்டையில் இருந்து காலை 10.05 மணிக்கு புறப்பட்டு நெல்லை வரும் ரயில் சேரன்மகாதேவி வரை மட்டுமே மேற்கண்ட 3 நாட்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


