News April 9, 2025
பணியின் போதே உயிரிழந்த போக்குவரத்து காவலர்!

வேடசந்தூர் போக்குவரத்து காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாலன் இன்று(ஏப்.9) வேடசந்தூரில் நடைபெற்ற விவசாயிகளுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்விற்கு செலுத்தும் பாதுகாப்பு பணிக்காக வரும் வழியில் மாரம்பாடி பிரிவு அருகே மயக்கம் வருவதாகக் கூறியுள்ளார். அப்போது, அங்கு இருந்தவர்கள் தனியார் மருத்துவமனையில் அவரை சேர்த்தும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
Similar News
News April 21, 2025
திருமண தடை நீக்கும் அற்புத கோவில்

திண்டுக்கல் மாவட்டம் செங்குறிச்சி அருகே பிரசித்தி பெற்ற திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக சுப்பிரமணியர் வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் திருமணத்தடை விலகி இல்லற வாழ்க்கை விரைவில் கைகூடும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
News April 21, 2025
திண்டுக்கல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் வரும் 25-ந்தேதி காலை 10.30 மணிக்கு, விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இதில் அனைத்து துறைகளின் தலைமை அலுவலர்கள் கலந்து கொண்டு மானிய திட்டங்கள், விவசாய கடன் தொடர்பாக விளக்கம் அளிக்க உள்ளனர். எனவே விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் தங்களுடைய கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம்.
News April 21, 2025
பழனியில் கஞ்சா விற்பனை செய்த 6 வாலிபர்கள் கைது!

பழனி நகர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் காவலர்கள் தீவிர ரோந்து & கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பின்புறம் கஞ்சா விற்பனை செய்த கார்த்திக்ராஜா(25), சிவக்குமார்(23), மாரிசாமி(21), அருண்குமார்(37), ஜேம்ஸ்(27), நாகேந்திரன்(27) ஆகிய 6 பேரை கைது செய்து அவர்கள் இடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து பழனி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.