News March 26, 2025
பணியின்போது உயிரிழப்பு: சடலத்துடன் போராட்டம்

கும்மிடிப்பூண்டி அடுத்த குருவராஜகண்டிகை கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி (57), தனியார் தொழிற்சாலையில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். கடந்த 22ஆம் தேதி பணிக்கு சென்றவர் நேற்று முன்தினம் மாலை உடல்நலக்குறைவு ஏற்பட்டு அரசு மருத்துவமனைகளுக்குச் சென்றபோது இறந்துவிட்டார். இதையடுத்து, தொழிற்சாலையில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதால் போராட்டம் முடிவுக்கு வந்தது.
Similar News
News August 25, 2025
திருவள்ளூர் சந்தையில் விலை நிலவரம்

திருவள்ளூர் இன்று காய்கறி, பழ விலை: வெங்காயம் ரூ.33–37, தக்காளி ரூ.61–67, பச்சைமிளகாய் ரூ.54–60, உருளைக்கிழங்கு ரூ.33–37, கேரட் ரூ.45–50, முட்டைகோஸ் ரூ.30–33, காலிஃபிளவர் ரூ.31–34, கத்திரிக்காய் ரூ.39–43, முருங்கைக்காய் ரூ.69–76. பழங்களில் ஆப்பிள் வாஷிங்டன் ரூ.276–305, சிம்லா ரூ.155–171, வாழை ரூ.69–76, மாம்பழம் ரூ.49–55, ஆரஞ்சு ரூ.63–70, திராட்சை ரூ.121–133, மாதுளை ரூ.132–146, பப்பாளி ரூ.36–39.
News August 25, 2025
திருவள்ளூர்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

2025-ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் வருகின்ற 26.08.2025 முதல் 12.09.2025 திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற உள்ளன. மேலும் நீச்சல் போட்டியானது 27.08.2025 அன்று நடைபெறவிருந்த போட்டியானது வருகின்ற 04.09.2025 அன்று காலை 6.00 மணிக்கு திருவள்ளூர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் உள்ள நீச்சல் குள வளாகத்தில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News August 25, 2025
திருவள்ளூர் மக்களே இந்த நம்பர் உங்க கிட்ட இருக்கா?

அரசு மருத்துவ மனைகளை நம்பி தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்லும் நிலையில், சில நேரங்களில் அங்கு சிகிச்சை சரி இல்லை என்ற புகாரும் வருகிறது. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை சரி இல்லை என்றாலோ, பணியாளர்கள் சரியாக நடந்துகொள்ளவில்லை என்றாலோ பொதுமக்கள் TOLL FREE 104 எண்ணில் புகார் செய்யலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க. <<17511472>>தொடர்ச்சி<<>>