News July 27, 2024

பணிநியமன ஆணைகளை வழங்கிய ஆட்சியர்

image

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த சார்நிலைப் பணியாளர்கள் தேர்வு-II (Combined Civil Service Examination-II) மூலம் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 17 நேரடி உதவியாளர்களுக்கு ஆட்சியர் அருண்ராஜ் பணிநியமன ஆணைகளை நேற்று வழங்கினார்.

Similar News

News March 3, 2026

செங்கை: சிலிண்டர் மானியம் வருதா? போனில் பார்க்கலாம்

image

கூகுளில் <>mylpg <<>>என்று இணையத்தளத்தில் சென்றால், 3 கியாஸ் சிலிண்டர்களின் படங்கள் இருக்கும். அதில் நீங்கள் வாங்கும் சிலிண்டரை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து உங்கள் மொபைல் எண்ணை போட்டால், OTP வரும். அந்த நம்பரையும் போட வேண்டும். பின்னர், View Cylinder Booking History அல்லது Subsidy transferred என்ற விருப்பத்தை கிளிக் செய்தால் நீங்கள் மானியம் தொடர்பான விவரங்களை பார்க்கலாம். ஷேர் செய்யுங்கள்.

News March 3, 2026

செங்கை: மலிவு விலையில் பைக், கார்

image

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில் கஞ்சா மற்றும் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட மொத்தம் 60 வாகனங்களுக்கு மார்ச்.7ஆம் தேதி ஏலம் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் பின்புறம் பொது ஏலத்தில் விடப்படுகின்றன. ஏலத்தில் பங்கேற்க இன்று மாலை 5 மணிக்குள் ரூ.1,000 நுழைவு கட்டணம் பெற்று ஏலத்தில் கலந்து கொள்ளலாம். *நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க*

News March 3, 2026

திருப்போரூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு!

image

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் சட்டமன்றத் தொகுதியில் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில், திருப்போரூர் வடக்கு ஒன்றிய செயலாளர் இதயவர்மன் நேற்று 02.03.2026 விருப்ப மனுவை அளித்தார். இந்நிகழ்ச்சியில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் அன்புச் செழியன் மற்றும் திமுக-வை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!