News March 9, 2025

பணிக்கம்பட்டி பெயிண்டர் உயிரிழப்பு

image

திண்டுக்கல் சேர்வைக்காரன்பட்டியை சேர்ந்தவர் லோகநாதன் (50). பெயிண்டரான இவர் கடந்த 7ம் தேதி கரூர் மாவட்டம் பணிக்கம்பட்டி சந்தையில் 10அடி உயர சுவற்றில் தனியார் ஜவுளிக்கடை விளம்பரம் பெயிண்ட் செய்த போது தவறி கீழே விழுந்து உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பெரில் குளித்தலை போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News September 10, 2025

கரூரில் தேசிய மக்கள் நீதிமன்றம்

image

கரூர் மாவட்டத்தில் தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின்பேரில் வருகின்ற 13.09.2025-ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தொலைபேசி எண்:04324-296570 தொடர்பு கொள்ளலாம். என மாவட்ட நீதிபதியும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான இளவழகன் கேட்டுக்கொள்கிறார்.

News September 10, 2025

கரூர்: உங்களுடன் ஸ்டாலின் திட்டம் நடைபெறும் இடங்கள்

image

கரூர் மாநகராட்சியில், வார்டு எண்.6,10-ற்க்கு வெங்கமேடு முத்து மஹாலிலும், கடவூர் வட்டாரத்தில், முள்ளிப்பாடி மற்றும் பாலவிடுதி ஆகிய ஊராட்சிகளுக்கு பாலவிடுதி ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்திலும், ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் நாளை 11.09.2025 நடைபெறவுள்ளது. என கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் அறிவித்துள்ளார். பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

News September 10, 2025

கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பொறுப்பேற்பு

image

கரூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளராக அபிராமி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். புதிதாக பொறுப்பேற்ற இணைப்பதிவாளருக்கு கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை கோட்ட பகுதிகளுக்கு உட்பட்ட கூட்டுறவு சங்க செயலாளர்கள், அலுவலகப் பணியாளர்கள் என பலரும் நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!