News June 7, 2024
பணமோசடி புகாருக்கு 1930-ல் அழைக்கலாம் – எஸ்பி

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. சுந்தர வதனம் கூறியதாவது, “நிதி இழப்பு மற்றும் பண மோசடிகளால் பாதிக்கப்பட்டால் காலம் தாழ்த்தாமல் உடனே 1930 என்ற இலவச உதவி எண்ணிலும் , www.cybercrime.gov. in என்ற இணையதளம் வாயிலாகவும் பொதுமக்கள் புகார் அளிக்க வேண்டும். இதன் மூலம் பெருமளவு சைபர் கிரைம் குற்றங்கள் தடுக்கலாம்.
இதனால் பணம் மீட்டெடுக்க வாய்ப்புள்ளது.” என்றார்.
Similar News
News April 21, 2025
கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

காலை 10 மணி – தூத்துக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தை தாலுகா மருத்துவமனையாக மாற்றக்கோரி அதன் முன்பு தூத்துக்குடி புனித தோமையார் மறை வட்டாரம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.காலை 10 மணி – போளூர் வழக்கறிஞர் சங்கத் தலைவர் குமரன் மீது பொய் வழக்கு பதிவு செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வழக்கறிஞர் கூட்டமைப்பு சார்பில் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடக்கிறது.
News April 21, 2025
கன்னியாகுமரி மாவட்ட பெண்கள் கவனத்திற்கு

கன்னியாகுமரி: பெண்கள் தங்களின் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் நேரடியான மற்றும் மறைமுகமான பிரச்னைகளை கருத்தில் கொண்டு women helpline – 181 என்ற சேவை செயல்பட்டு வருகிறது. அதில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளான பாலியல் தொந்தரவு, வரதட்சனை கொடுமை, மன அழுத்தம் போன்றவைகளுக்கு மருத்துவம் மற்றும் சட்ட ரீதியான ஆலோசனைகளை வழங்குவர். (இதில் பகிரப்படும் செய்திகள் பாதுகாக்கப்படும்) *ஷேர் பண்ணுங்க
News April 21, 2025
ஓடும் பஸ்ஸில் மூதாட்டியிடம் நகை திருட்டு

ஈத்தாமொழி அருகே பெரிய விளையைச் சேர்ந்தவர் காந்திமதி(70). ஈஸ்டர் பண்டிகையொட்டி நாகர்கோவில் நேசமணி நகரில் உள்ள ஆலயத்திற்கு வந்தார். பிரார்த்தனை முடிந்து அவர் பஸ்ஸில் ஏறி டெரிக் சந்திப்புக்கு சென்ற நிலையில் அவர் கழுத்தில் அணிந்து இருந்த 4.5 பவுன் தங்கச் சங்கிலியை காணவில்லை. இது குறித்து போலீசில் புகார் செய்த நிலையில் நேசமணி நகர் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.