News April 9, 2024

பணத்தை திருப்பி கேட்டவருக்கு நேர்ந்த கொடுமை

image

ஆலந்தளிரை சேர்ந்தவர் சுருளி. இவர் அழகுமலை என்பவர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். குத்தகை காலம் முடிவடைந்ததால் 6 ஆம் தேதி குத்தகை பணத்தை அவர் திருப்பிக் கேட்கும் போது பிரச்சனை ஏற்பட்டது. அழகுமலையும் அவரது குடும்பத்தினர் 5 பேரும் சேர்ந்து சுருளியை கம்பி,அரிவாளால் தலையில் அடித்து, மகள் பேரன் ஆகியோரையும் தாக்கியுள்ளனர். இதுகுறித்து கடமலைகுண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News April 30, 2025

தேனி குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு

image

தேனி குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் Helper(பெண்), Night Watchman(ஆண்) பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தமாக 2 காலிபணியிடங்களுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் நாள் 30-04-2025 முதல் 07-05-2025 வரை. தகுதியான நபர்களுக்கு Rs.4,500 வரை சம்பளம் கிடைக்கும். இதற்கு விண்ணபிக்க 8ம் வகுப்பு தேர்ச்சியும் 42வயது மிகாமல் இருத்தல் அவசியம். <>லிங்க்<<>> *ஷேர் பண்ணுங்க

News April 30, 2025

பெங்களூரு வியாபாரி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

image

பெங்களூரைச் சோ்ந்த கண்ணாடி, அலங்காரப் பொருள்கள் வியாபாரியான திலீப் என்பவரை காரில் கடத்தி அடித்து கொலை செய்து உடலை புதைத்த வழக்கில் தேனி காவல் நிலைய போலீசார் நேற்று முன்தினம் 7 பேரை கைது செய்தனர். இந்நிலையில் திலீப்பை காரில் கடத்திச் செல்வதற்கு உடந்தையாக இருந்த ஆண்டிபட்டியை சேர்ந்த மோகன்(30) என்பவரை போலீசார் நேற்று(ஏப்.29) கைது செய்தனர்.

News April 29, 2025

தேனி : முதிர்வு தொகை பெற அரிய வாய்ப்பு

image

தேனி மாவட்ட சமூகநலத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின்கீழ் 18 வயது பூர்த்தியடைந்து முதிர்வு தொகை பெறுவதற்கு தகுதியான கண்டறிய இயலாத 589 பயனாளிகளின் பெயர்ப்பட்டியல் https://theni.nic.in என்ற இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பயனாளிகள் தங்களது உரிய ஆவணங்களை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒப்படைத்து பயன் பெறலாம்.

error: Content is protected !!