News March 29, 2025
பணத்திற்கு பதில் பேப்பர் கட்டு; ரூ.5 லட்சம் மோசடி…!

ஆந்திரா மாநிலம் சித்தூர் சேர்ந்தவர் ஹனிஃபா. இவர் டெய்லரிங் ஸ்பேர் பார்ட்ஸ் கடையை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வந்த வட மாநில இளைஞர்கள், ஆசை வார்த்தைகளைக் கூறி ராணிப்பேட்டைக்கு வரவைத்து வெளிநாட்டு பணம் கொடுப்பதாக பேப்பர் கட்டுகளை கொடுத்து ரூ.5 லட்சம் மோசடி செய்து தப்பி சென்றனர். இதுகுறித்து புகாரின்பேரில் ராணிப்பேட்டை போலீசார் வட மாநிலத்தைச் சேர்ந்த 6 பேரை கைது செய்தனர்.
Similar News
News October 27, 2025
ராணிப்பேட்டை: ரேஷன் உறுப்பினர் சேர்க்கை; PHONE போதும்!

ரேஷன் கார்டில் உங்க புது உறுப்பினர்களை சேர்க்கனுமா? இதற்கு இங்கும் அலைய வேண்டியதில்லை. உங்க போன் போதும். 1.<
News October 27, 2025
அரக்கோணம்: தண்டவாளம் அருகே வாலிபர் சடலம்!

ராணிப்பேட்டை: திருத்தணி – அரக்கோணம் ரயில் நிலையங்களுக்கு இடையே நேற்று(அக்.26) காலை 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதாக அரக்கோணம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடலை கைப்பற்றி அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News October 27, 2025
ராணிப்பேட்டைக்கு ஆரஞ்ச் அலர்ட்!

தமிழக வங்கக் கடலில் உருவாகியுள்ள மோந்தா புயல், விரைவில் அதி தீவிர புயலாக மாறவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது பல்வேறு மாவட்டங்களில் பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஆகையால், பொதுமக்கள் முன் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள கேட்டுக்கொள்ளபடுகிறார்கள். உங்க ஏரியால மழை பெய்யுதா…?


