News September 1, 2025
பணகுடியில் பொதுமக்கள் சாலை மறியல்

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் பீலா கோட்டைபாறையில் 2 பேர் விபத்தில் பலியானதை தொடர்ந்து பணகுடிக்கும் வள்ளியூருக்கும் இடையே தெற்கு வள்ளியூர் நான்கு வழி சாலை சந்திப்பில் விபத்து ஏற்படுத்தும் பகுதியில் மேம்பாலம் அமைக்க கோரி 5 கிராம பொதுமக்கள் சாலை இன்று மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் பணகுடி காவல் ஆய்வாளத்தில் ராஜாராம் மற்றும் காவல்துறையினர் நெடுஞ்சாலை துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
Similar News
News September 4, 2025
நெல்லை பெண்கள் விமானப்படையில் பங்கேற்கலாம்

நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தெரிவித்ததாவது தாம்பரத்தில் செப். 5 அன்று நடைபெறும் இந்திய விமானப்படையின் அக்னிவீர் ஆள்சேர்ப்பு முகாமில் 21 வயதுக்குள் திருமணமாகாத பெண்கள் பங்கேற்கலாம். 1.1.2005 முதல் 7.1.2008 வரை பிறந்தவர்கள், +2 அல்லது 3 ஆண்டு டிப்ளோமா, 2 ஆண்டு தொழிற்கல்வியில் 50% மதிப்பெண் பெற்றவர்கள் https://agnipathvayu.cdac.in மூலம் விண்ணப்பிக்கலாம்.
News September 4, 2025
நெல்லையில் வீட்டிற்கு ரூ.1.61 கோடி மின்கட்டணம்

திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டி உபமின் நிலையத்திற்குட்பட்ட மருதகுளம் பகுதியில் கூலித்தொழிலாளி மாரியப்பன் என்பவர் வசித்து வருகின்றார்.இவரது வீட்டிற்கு இந்த மாதம் ரூ.1,61,31,281 மின் கட்டணம் வந்துள்ளது. இது குறித்து அவர் மின்வாரியத்தில் புகார் அளித்துள்ளார். இதற்கு மின்வாரியம் தரப்பில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தவறு ஏற்பட்டுள்ளது. இது இன்று சரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 4, 2025
நெல்லை: 10th முடித்தால் விமான நிலையத்தில் வேலை.!

இந்திய விமான நிலையங்களில் 1446 Ground Staff மற்றும் Loaders பணியிடங்கள் காலியாக உள்ளது. இப்பணிகளுக்கு சம்பளமாக ரூ.25,000 முதல் ரூ.35,000 வரை வழங்கப்படுகிறது. 10th மற்றும் 12th முடித்தவர்கள் <