News July 24, 2024
பட்டு தொழில் ஆராய்ச்சி மையத்தில் வேலை வாய்ப்பு

காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் மண்டல பட்டு தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தில் மாஸ்டர் ரீலர், டெக்னீஷியன், வீவர், டையர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு வரும் 25 ஆம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெறவுள்ளது. கல்வித்தகுதி குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன், மேற்குறிப்பிட்ட பணிகளில் இரண்டு ஆண்டுகள் அனுபவம் எதிர்பார்க்கப்படுகிறது. மாத சம்பளம் ரூ.21,000 வரையறுக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 28, 2025
காஞ்சிபுரத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு வாகனங்கள்.

காஞ்சிபுரம் மாநகராட்சியில், தேசிய நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டம் மூலம், சாலையோர உணவு வியாபாரிகளுக்கு 50 வியாபார வாகனங்கள் வழங்கப்படவுள்ளன. சென்னை மாநகராட்சியில் இருந்து பெறப்பட்ட இந்த வாகனங்களை, குலுக்கல் முறையில் தகுதியான 50 வியாபாரிகளுக்கு வழங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.
News August 28, 2025
பரந்தூர் விமான நிலையம்: சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம்

பரந்தூர் பசுமை விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 6-ம் தேதி மாலை காஞ்சிபுரம் பேருந்து நிலையம் எதிரே நடைபெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை ஏற்கிறார். இதில் அப்பகுதி கிராம மக்களும் கலந்துகொள்ள உள்ளனர்.
News August 28, 2025
காஞ்சிபுரத்தில் இலவச வீட்டு மனை வேண்டுமா?

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.