News August 16, 2024

பட்டியலின, பழங்குடியின மாணவர்களுக்கு உதவித்தொகை

image

கனரா வங்கியின் கோவை மண்டல அலுவலகத்தின் சாா்பில் சிறந்த பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவிகள் 126 பேருக்கு வித்யா ஜோதி திட்டத்தின்கீழ் ரூ.5.04 லட்சம் உதவி தொகை நேற்று வழங்கப்பட்டது. இதனை கோவை மாவட்ட தாட்கோ மேலாளா் மகேஸ்வரி வழங்கினார். அப்போது, மண்டல தலைவா் ரதீஷ் சந்திர ஜா, கோட்ட மேலாளா்கள் நஞ்சுண்டா, ஸ்ரீதா் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Similar News

News January 27, 2026

கோவை: ரூ.3 லட்சம் கடன் வேண்டுமா? APPLY NOW

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ.1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <>இங்கே கிளிக்<<>> செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். ( SHARE பண்ணுங்க)

News January 27, 2026

மேட்டுப்பாளையம் அருகே தாக்குதல்: 3 பேர் கைது

image

மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அஜித். இவர் நேற்று அலங்காரம்மன் கோயில் அருகே தனது நண்பர்களுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 இளைஞர்கள், அஜித்திடம் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கினர். அப்போது தடுக்க வந்த அஜித்தின் நண்பர் மற்றும் அவரது மகளையும் தாக்கினர். இதுகுறித்த புகாரின் பெயரில், சச்சின் (எ) நவீன் குமார், மோகன் குமார் (எ) மொக்கை மோகன் மற்றும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியை கைது செய்தனர்.

News January 27, 2026

POWER CUT: கோயம்புத்தூரில் இங்கு மின்தடை

image

கோவையில் இன்று (ஜன.27) பல்வேறு பகுதியில் மின்தடை ஏற்படவுள்ளது. அதன்படி, குருநல்லிபாளையம், கோதவாடி, நல்லட்டிபாளையம், வடசித்தூர், நெகமம், கொண்டேகவுண்டம்பாளையம், சின்னநெகமம், அரசூர், கோமங்கலம், சீலக்காம்பட்டி, செட்டிபாளையம், கோலார்பட்டி, பெதப்பம்பட்டி, லிங்கமநாயக்கன்புதூர், மூலனூர், கொங்கல்நகரம், எஸ்.அம்மாபட்டி, எல்லப்பநாயக்கனூர் பகுதியில் இன்று காலை 9மணி முதல் மாலை 4மணி வரை மின்தடை ஆகும்.

error: Content is protected !!