News October 23, 2024

பட்டாசு கடை அமைப்பதற்கு நாளை ஏலம்

image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை தீவுத்திடலில் பட்டாசுக் கடைகள் அமைப்பதற்கான ஏல அறிவிப்பை தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ளது. திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம் மூலம் இந்த ஏலம் நடைபெற உள்ளது. ஏலம், நாளை (அக்.24) மாலை 3 மணிக்கு நடைபெறும்/ ஏலம் எடுப்பவர்கள் நாளை மாலை 2 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Similar News

News February 10, 2026

சென்னையில் கொடூரம்; குடும்பத்திற்கே அரிவாள் வெட்டு!

image

டி.பி.சத்திரம், ஜோதியம்மாள் நகரை சேர்ந்தவர் பரமசிவம் (50). கடந்த 5 – ந் தேதி இரவு வீட்டினருகே நடந்து வரும்போது, அவரது அண்ணன் மகனான சந்தோஷ் என்பவர் இவரை அரிவாளால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதை தடுக்க வந்த பரமசிவத்தின் மனைவி, மகளையும் தாக்கியுள்ளார். புகாரின் பேரில் டி.பி சத்திரம் போலீசார் ராணிப்பேட்டை சொறையூரை சேர்ந்த சந்தோஷ்குமார் (25) என்பவரை கைது செய்தனர்.

News February 10, 2026

சென்னை: தூக்கில் தொங்கிய பள்ளி மாணவி

image

நுங்கம்பாக்கத்தை சேர்ந்தவர் தர்ஷிகா (14). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9 – ம் வகுப்பு படித்து வந்தார். இவர் செல்போனில் அதிக நேரம் விளையாடியதால் அவரது தாய் கண்டித்துள்ளார். இதனால் மனம் உடைந்த தர்ஷிகா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நுங்கம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர். *தற்கொலை எதற்கும் தீர்வல்ல*

News February 10, 2026

பெரம்பூர்: வட மாநிலத் தொழிலாளியிடம் பணம் பறிப்பு

image

பீகாரை சேர்ந்தவர் ராஜ்குமார் (22). இவர் சொந்த ஊர் சென்று விட்டு, நேற்று பெரம்பூரில் இருந்து ஆட்டோ மூலம் மாத்தூர் சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் வியாசர்பாடி, கள்ளுக்கடை ஜங்சன் அருகில் ஆட்டோவை நிறுத்திய ஆட்டோ ஓட்டுநர், இவரை மிரட்டி தாக்கி ரூ.10,000/-ஐ பறித்து சென்றார். புகாரின் பேரில் வியாசர்பாடி போலீசார், பெரம்பூரை சேர்ந்த விக்னேஷ்வரன் (33) என்பவரை நேற்று கைது செய்தனர்.

error: Content is protected !!