News October 16, 2025
பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்க கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டத்தில் தீபாவளியன்று நடைபெறும் பட்டாசு கடைகளின் வியாபாரத்திற்கு அரசு அனுமதி சான்று சென்ற ஆண்டு வரை முன்கூட்டியே வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த ஆண்டு தீபாவளிக்கு 3 தினங்களே உள்ள நிலையில் இன்னும் பட்டாசு கடைகளுக்கான சான்று வழங்கப்படாமல் காலம் கடத்தப்பட்டு வருகிறது. இதனால் விரைவாக அனுமதி வழங்க வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Similar News
News October 17, 2025
புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (அக்.16) இரவு 10 மணி முதல் இன்று (அக்.17) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனைமற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
News October 16, 2025
புதுகை: சிலிண்டர் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

புதுக்கோட்டை மக்களே உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இதை SHARE பண்ணுங்க!
News October 16, 2025
புதுகை: மணல் கடத்திய மாட்டுவண்டி பறிமுதல்

புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி அடுத்த கருக்காக்குறிச்சி பிள்ளையார் கோவில் அருகே, வீரபத்திரன் (33) என்பவர் மாட்டு வண்டியில் மணல் கடத்தலில் ஈடுபட்டிருந்தார். இதனை அடுத்து கருக்கா குறிச்சி சரக விஏஓ ரமேஷ் குமார் அளித்த புகாரின் பேரில் வடகாடு காவல் துறையினர் அவர் மீது வழக்கு பதிந்து மேலும் அவரிடமிருந்து 1/4 யூனிட் மணலுடன் மாட்டு வண்டியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.