News January 26, 2026

படுக்கையறையில் இருக்கக் கூடாத 10 பொருள்கள்

image

படுக்கை அறையில் நாம் வைக்கும் சில பொருள்கள் வாஸ்துப்படி தீமைகளை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. அவை: *டீ, காபி கப், சாப்பிட்ட தட்டுகள் உள்ளிட்ட கழுவப்படாத பாத்திரங்கள் *தலையணைக்கு கீழே பேப்பர், புத்தகம், தங்க நகைகள் *படுக்கையில் எலக்ட்ரானிக் கேட்ஜெட்ஸ், செல்லப்பிராணி. இவை தூக்கத்தை பாதிப்பதுடன், நெகடிவ் எனர்ஜியை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. அதேபோல படுக்கைக்கு நேராக கண்ணாடி இருக்கக் கூடாது.

Similar News

News February 2, 2026

எலக்ட்ரிக் ஷாக் கொடுத்து மகளை கொன்ற தந்தை

image

UP-ல், காதல் விவகாரத்தில் 21 வயது மகளை பெற்ற தந்தையே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதலித்தவனை மணம் முடிப்பேன் என அப்பெண் பிடிவாதமாக இருந்ததால் தந்தையும், அண்ணனும் அவரது வாயில் துப்பட்டா வைத்து அடைத்து, கைகளை கட்டி தாக்கியுள்ளனர். மேலும், எலக்ட்ரிக் ஷாக் கொடுத்ததால் பரிதாபமாக உயிரிழந்தார். விசாரணை அடிப்படையில் இருவரையும் கைது செய்த போலீஸ், இது ஆணவக் கொலையா என சந்தேகிக்கிறது.

News February 2, 2026

காமராஜர் பொன்மொழிகள்!

image

*பணம் இருந்தால்தான் எனக்கு மரியாதை தருவார்கள் என்றால் அந்த மரியாதையே எனக்குத் தேவையில்லை *எல்லோருடைய வாழ்க்கையும் வரலாறு ஆவதில்லை. வரலாறாய் ஆனவர்கள் தனக்காக வாழ்ந்ததில்லை *நேரம் தவறாமை என்னும் கருவியை உபயோகிப்பவன் எப்பொழுதும் கதாநாயகன்தான் *சமதர்ம சமுதாயம் மலர வன்முறை தேவையில்லை! அனைவருக்கும் கல்வியும், உழைப்புக்கான வாய்ப்பும் தந்தால் போதுமானது

News February 2, 2026

புறக்கணித்த பாகிஸ்தான்.. இதுவே இந்தியாவின் முடிவு

image

டி20 WC-ல் இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அரசாங்கம் அறிவித்துள்ளது. எனினும், ஐசிசி விதிகளின்படி பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட இலங்கைக்கு இந்திய அணி பயணிக்க வேண்டும். போட்டிக்கு பயிற்சி மேற்கொள்ளுதல், பத்திரிகையாளர் சந்திப்பு என அனைத்தும் நடக்கும். ஆனால் போட்டி ரத்து என நடுவர் அறிவிக்கும் வரை இந்தியா காக்க வேண்டும் என பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகின்றன.

error: Content is protected !!