News July 8, 2024
படியில் பயணித்த 41 பேர் உயிரிழப்பு

மதுரை ரயில்வே கோட்டத்தில் கடந்த 6 மாதங்களில் விபத்து குறித்து 39 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில், 23 பேர் உயிரிழந்தனர், 17 பேர் காயமடைந்தனர். 2023ஆம் ஆண்டில் மட்டும் படியில் பயணித்த 41 பேர் உயிரிழந்தனர். 43 பேர் காயமடைந்ததாக மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. விபத்துக்குள்ளானவா்களில் 87% பேர் 25 வயதுக்குள்பட்ட இளைஞர்கள் எனவும், 13%பேர் பெண்கள் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 6, 2025
மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

மதுரை மாவட்டத்தில் இன்று (05.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 5, 2025
மதுரை: போன் தொலைந்து விட்டதா..நோ டென்ஷன்..!

மதுரை மக்களே..! உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News September 5, 2025
மதுரையில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்..!

மதுரையில் வைகை இரண்டாவது கூட்டு குடிநீர் திட்டத்தில் குழாய்களில் இணைப்பு பணிகள் மேற்கொள்வதால் வைகை வடகரை, தென்கரைப் பகுதியில் 21 வார்டுகளில் செப்டம்பர் 6 (நாளை) மற்றும் 7 (நாளை மறுநாள்) குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என மதுரை மாநகராட்சி அறிவித்துள்ளது. வார்டு எண்கள் 27 முதல் 34 மற்றும் 75 முதல் 93 வரை உள்ள பகுதிகளில் லாரி மூலம் விநியோகம் செய்யப்படும் குடிநீரை பயன்படுத்தி கொள்ளலாம். SHARE IT..