News April 22, 2024
பஞ்சு ஏற்றி வந்த வேன் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

திருப்பூரைச் சேர்ந்தவர் செவடமுத்து. சொந்தமாக வேன் வைத்து வாடகைக்கு ஓட்டிவருகிறார். ஊத்துக்குளியிலிருந்து நூல் மில்லுக்கு தேவைப்படும் கழிவு பஞ்சு பேல்களை ஏற்றிக்கொண்டு வேன் சென்றது. வேனை திருவாரூரைச் சேர்ந்த மோகன் என்பவர் ஓட்டிவந்தார். வெள்ளகோவில் காமநாயக்கன்பட்டி பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது மின் கம்பியில் உரசி எதிர்பாராதமாக விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் லாரி முற்றிலும் எரிந்து சேதமானது.
Similar News
News April 19, 2025
வேண்டுதலை நிறைவேற்றும் அற்புத கோயில்

திருப்பூர் மாவட்டம் எஸ்.பெரியபாளையம் அருகே பிரசித்தி பெற்ற சுக்ரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக சுக்ரீஸ்வரர் வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் நினைத்தது நடக்கும், மருகு போன்ற தோல் சம்மந்தமான பிரச்சனைகள் தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது . உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
News April 19, 2025
திருப்பூர்: முக்கிய அரசு அதிகாரிகள் தொடர்பு எண்கள்!

▶️திருப்பூர் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் 0421-2971117. ▶️திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் 0421-2971122. ▶️சிறுபான்மையினர் நல அலுவலர் 0421-2971130. ▶️மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் 0421-2971128. ▶️மாவட்ட வழங்கல் அலுவலர் 0421-2971116. ▶️உதவி ஆணையர் (கலால்) 0421-2971103. ▶️உதவி இயக்குநர், நில அளவை 0421-2971141. ▶️உதவித் திட்ட அலுவலர் (வீடுகள்&சுகாதாரம்) 0421-2971177. இதை SHARE பண்ணுங்க.
News April 19, 2025
பனியன் துணி வாங்கி மோசடியில் ஈடுபட்டவர் கைது

திருப்பூர் காந்திநகரில் துணி ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருபவர் மகேஷ் ராமசாமி. இவரிடம் ஐதராபாத்தை சேர்ந்த தம்பதி, பனியன் துணிகள் வாங்கி ரூ.1.45 கோடி, மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மகேஷ் ராமசாமி அளித்த புகாரின்பேரில், போலீசார் தம்பதியை தேடி வந்தனர். இந்நிலையில், மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த, பிரவீன் குமார் யெச்சூரி, கல்பனா யெச்சூரி ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்தனர்.