News June 4, 2024
பஞ்சாப் அரசியலில் அம்ரித்பால் சிங் அதிரடி

பஞ்சாப்பின் காதூர் சாஹிப் மக்களவைத் தொகுதியில் காலிஸ்தான் ஆதரவாளரும் ’வாரிஸ் பஞ்சாப் தே’ கட்சித் தலைவருமான அம்ரித்பால் சிங் போட்டியிட்டுள்ளார். தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், நாட்டின் இருபெரும் (NDA & INDIA) கூட்டணிகளுக்கு தலைவலி அளிக்கும் போட்டியாளராக களத்தில் உள்ளார். சிறையில் இருக்கும் அவர் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
Similar News
News August 27, 2025
அமெரிக்காவால் பாதிக்கப்படும் துறைகளுக்கு சலுகை

அமெரிக்க வரிவிதிப்பால் அதிக பாதிப்பிற்கு உள்ளாகும் தொழில் துறையினருக்கு பல்வேறு சலுகைகளை அளிக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய பொருள்கள் மீதான அமெரிக்காவின் 50% வரிவிதிப்பு நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதனால் ஜவுளி, ஃபர்னிச்சர், வேளாண் பொருள்கள், லெதர் உள்பட பல்வேறு துறையினருக்கு மிகப்பெரும் பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.
News August 27, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஆகஸ்ட் 27) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News August 27, 2025
CM ஸ்டாலின் குடும்பத்துடன் மோதலா? அமைச்சர் நேரு பதில்

திருச்சி பஞ்சப்பூரில் புதிதாக திறக்கப்பட்ட பஸ் நிலையம் அருகே, அமைச்சர் நேருவுக்கு 300 ஏக்கர் நிலம் இருப்பதாக EPS குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் பஞ்சப்பூரில் தனக்கு சொத்து எதுவும் இல்லை என தெரிவித்த நேரு, அப்படி இருந்தால் அரசோ, மக்களோ எடுத்துக் கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார். அதேபோல், CM குடும்பத்துடன் நேருவுக்கு மோதல் இருப்பதாக செய்தி பரவியதையும் அவர் முற்றிலுமாக மறுத்துள்ளார்.