News November 6, 2025

பஞ்சப்பூர்: புதிய பாலம் திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம்

image

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து முனையம் அருகே புதிய மேம்பாலம் மற்றும் அரைவட்ட சுற்றுச்சாலையை 4 வழிச்சாலையாக மேம்படுத்துதல் ஆகிய பணிகளுக்காக ரூ.800 முதல் ₹.900 கோடி வரை ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையை தனியார் நிறுவனம் ஒன்று தயாரித்து வருகிறது. இன்னும் 3 மாதங்களில் திட்ட அறிக்கை சமர்ப்பித்த பிறகு விரைவில் பணிகள் தொடங்கப்படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.

Similar News

News January 25, 2026

திருச்சி: ஒரே ஆண்டில் 849 வழக்குகள்

image

திருச்சி ரயில்வே காவல் நிலையம் பிச்சாண்டார்கோவில், மணப்பாறை, குமாரமங்கலம், சோழகம்பட்டி ஆகிய ரயில் நிலையங்களை எல்லைகளாக கொண்டு இயங்கி வருகிறது. இக்காவல் நிலையத்தில் கடந்த 2025-ம் ஆண்டு நகை திருட்டு வழக்கு, வழிப்பறி, கைபேசி திருட்டு வழக்குகள் என மொத்தம் 849 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தொடர் கண்காணிப்பின் காரணமாக குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளதாக ரயில்வே காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 25, 2026

திருச்சி: கொலை வழக்கில் 4 பேர் கைது

image

திருச்சி மாவட்டம், புத்தாநத்தம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காவல்காரன்பட்டியைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன் என்பவர், கடந்த 19-ம் தேதி வீட்டில் உறங்கிய நிலையில் மர்மமான முறையில் காயங்களுடன் இறந்து கிடந்தார். இது தொடர்பான வழக்கில் குற்றவாளிகள் 4 பேரை புத்தாநத்தம் காவல் துறையினர் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். துரிதமாக செயல்பட்ட காவலர்களை திருச்சி மாவட்ட எஸ்.பி பாராட்டினார்.

News January 25, 2026

திருச்சி: கொலை வழக்கில் நான்கு பேர் கைது

image

திருச்சி மாவட்டம், புத்தாநத்தம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காவல்காரன்பட்டியைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன் என்பவர், கடந்த 19ஆம் தேதி வீட்டில் உறங்கிய நிலையில் மர்மமான முறையில் காயங்களுடன் இறந்து கிடந்தார். இது தொடர்பான வழக்கில் குற்றவாளிகள் 4 பேரை புத்தாநத்தம் காவல் துறையினர், இன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். துரிதமாக செயல்பட்ட காவலர்களை திருச்சி மாவட்ட எஸ்பி பாராட்டினார்.

error: Content is protected !!