News October 25, 2024
பச்சைமலை கோவிலில் கந்தசஷ்டி விழா

ஈரோடு மாவட்டம், கோபி அருகே பச்சைமலையில், இந்து சமய அறநிலையத்துறையின் கீழ், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் நடப்பாண்டு கந்தசஷ்டி, சூரசம்ஹாரம், திருக்கல்யாண உற்சவத் திருவிழா, வரும் நவம்பர் 2ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. நவ.2ல் சஷ்டி விரதம் காப்பு கட்டுதல் நடைபெறுகிறது. தொடர்ந்து தினமும் பல்வேறு ஹோமங்கள் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளன.
Similar News
News August 5, 2025
ஈரோடு: மானிய விலையில் மக்காச்சோள விதை விநியோகம்

ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியில் 5402 ஹைபிரிட் மக்காச்சோள விதை மானிய விலையில் வேளாண்மை துறை மூலமாக தமிழக அரசால் வழங்கப்படுகிறது. தாளவாடி மற்றும் துணை வேளாண்மை மையம் அறை பாளையம் ஆகிய கிடங்குகளில் இருப்பு உள்ளது, தேவைப்படும் விவசாயிகள் தாளவாடி உதவி வேளாண்மை அலுவலரை தொடர்பு கொள்ளவும் தொடர்பு எண் 9688491749.
News August 5, 2025
புதுப்பாளையம் குருநாதசாமி கோவிலில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

அந்தியூர் புதுப்பாளையத்தில் வருகிற ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை குருநாதசாமி கோவில் தேர் திருவிழா கால்நடை சந்தையுடன் நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள் விழாவிற்கு ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, சார் ஆட்சியர் சிவானந்தம், அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தன் மற்றும் அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
News August 5, 2025
ஈரோடு: வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனத்திற்கு!

ஈரோட்டில், வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.