News April 16, 2025
பச்சைப்பயறு கொள்முதல் – ஆட்சியர் அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் பச்சைப்பயறு கொள்முதல் ஜூன் 29ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். விவசாயிகள் விளைவித்த பச்சைப் பயறுகளை மத்திய அரசின் நேபட் நிறுவனத்துடன் இணைந்து தமிழக அரசு கொள்முதல் செய்ய உள்ளது. உள்ளூர் சந்தையில் கிலோ ரூ.70 முதல் ரூ.75 வரை விற்பனை செய்யப்படும் நிலையில், தமிழக அரசு கிலோ ரூ.86.82க்கு கொள்முதல் செய்ய உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News February 11, 2026
மயிலாடுதுறை: ரயில் சேவை மாற்ற அறிவிப்பு

ரயில்வே பராமரிப்பு பணியின் காரணமாக, மயிலாடுதுறையில் புறப்பட்டு திருச்சி வழியாக செங்கோட்டை செல்லும் விரைவு ரயில் வருகிற பிப்ரவரி 11, 13, 16, 18, 20, 23, 25, 27 ஆகிய தேதிகளில் ஆடுதுறையிலிருந்து புறப்பட்டு செல்லும், மயிலாடுதுறையில் இருந்து புறப்படாது. மேலும் திருச்சியில் காலை 6 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை வரும் ரயில், ஆடுதுறையில் நிறுத்தப்படும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 11, 2026
மயிலாடுதுறை: இனி உங்கள் ஆதார் அட்டை வாட்ஸ் அப்பில்

மயிலாடுதுறை மக்களே, உங்கள் தொலைந்த ஆதார் கார்டை மீண்டும் வாங்க இனி அங்கும் இங்கும் அலைய வேண்டாம். உங்களது போனில் ‘90131 51515’ என்ற உதவி மைய எண்ணை SAVE செய்து, அதில் வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அது வேலை செய்யாத பட்சத்தில் இங்கே <
News February 11, 2026
மயிலாடுதுறை: டிகிரி போதும் – வங்கி வேலை ரெடி

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) காலியாக உள்ள Circle Based Officers (CBO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2050
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.48,480
5. கல்வித் தகுதி: ஏதேனும் டிகிரி
6. கடைசி தேதி: 18.02.2026
7. விண்ணப்பிக்க: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


