News April 18, 2024

பசுமை வாக்குச்சாவடி: திருவள்ளூர் கலெக்டர் ஆய்வு

image

திருவள்ளூர் நகராட்சியில் உள்ள தொடக்கப் பள்ளியில் மக்களவைத் தேர்தல்-2024 ஐ முன்னிட்டு நேற்று (ஏப்ரல் 16) திருவள்ளூர் மக்களவைத் தொகுதிக்கான பசுமை வாக்குச்சாவடி மையம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படுவதை மாவட்ட தேர்தல் அலுவலரும், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருமான பிரபுசங்கர் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

Similar News

News February 14, 2026

திருவள்ளூரில் ரேஷன் கார்டு பிரச்னையா..?

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் வட்ட வழங்கல் அலுவலகத்தில், இன்று(பிப்.14) நடைபெறும் மாதாந்திர குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் , நீக்கல் மற்றும் திருத்தம் சிறப்பு முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறது.

News February 14, 2026

திருவள்ளூர்: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

image

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 14, 2026

திருவள்ளூரில் வீடு புகுந்த வன்முறை!

image

புட்லூர், ஏ.வி.எம் நகரைச் சேர்ந்தவர்சியாமளா(50) நேற்று(பிப்.13) மதியம் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, மக்கள் தொகை எடுப்பதாகக் கூறி பவித்ரா(28) என்பவர் வீட்டிற்குள் நுழைந்தார். திடீரென சியாமளாவை கத்தியால் குத்திவிட்டு செயினை பறிக்க முயன்றார். ஆனால், சியாமளா தப்பித்து வெளியே வந்து, பவித்ராவை உள்ளே வைத்து பூட்டினார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பவித்ராவை கைது செய்தனர்.

error: Content is protected !!