News June 23, 2024

பக்தர்களுக்கு அடிப்படை வசதி வேண்டும்: ரூபி மனோகரன்

image

நாங்குநேரி அடுத்த திருக்குறுங்குடியில் உள்ள மலை நம்பி கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு, அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்திட வேண்டுமென நாங்குநேரி எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் நேற்று சட்டசபையில் வலியுறுத்தினார். இதற்கு அமைச்சர் சேகர்பாபு வனப்பகுதியில் உள்ள கோவில்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட்டு இருப்பதாகவும், விரைவில் வசதிகள் மேம்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

Similar News

News September 14, 2025

நெல்லையில் திருக்குறள் பயிற்சி கலந்து கொள்ள அழைப்பு

image

திருநெல்வேலி திருவள்ளுவர் பேரவை இலக்கிய அமைப்பு சார்பில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கட்டணமில்லா திருக்குறள் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், தமிழக அரசு திருக்குறள் ஒப்புவிக்கும் மாணவ மாணவிகளுக்கு நடத்தப்படும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்ளவும் வழி காட்டப்படுகிறது என்று பேரவை அமைப்பாளர் ஜெயபாலன் தெரிவித்தார். விபரங்களுக்கு 9842080208 அழைக்கலாம்.

News September 14, 2025

நெல்லை: 2 நாட்கள் குடிநீர் நிறுத்தம் – ஆணையர் அறிவிப்பு

image

நெல்லை மாநகராட்சி கமிஷனர் டாக்டர்.மோனிகா ராணா அறிவிப்பு: மேலப்பாளையம் மண்டலத்தின் சுத்தமல்லி நீரேற்று நிலையம் அருகில் 600 மி.மீ. பிரதான குழாய் உடைப்பால் நீர் இயக்கம் நிறுத்தப்பட்டு சரிசெய்யும் பணி நடக்கிறது. ஆகவே 40, 41, 42, 51, 53, 54, 55 வார்டுகளுக்கு இன்று மற்றும் நாளை அதாவது செப். 14, 15 ஆகிய நாட்களில் குடிநீர் விநியோகம் இருக்காது; பொதுமக்கள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்தவும். *ஷேர்

News September 14, 2025

நெல்லையில் 35 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் – ஆட்சியர்

image

நெல்லை மாவட்டத்தில் கார் பருவ நெல் அறுவடைத் தொடங்கிய விவசாயிகளுக்காக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் 35 நேரடி கொள்முதல் நிலையங்களை திறந்துள்ளது. அம்பை-12, சேரன்மாதேவி-12, பாளையங்கோட்டை-7, நாங்குநேரி-2, நெல்லை-1, மானூர்-1 என அமைந்துள்ளன. சன்னரக நெல் குவிண்டுக்கு ரூ.2,545 பொதுரகத்துக்கு ரூ.2,500 வழங்கப்படுகிறது. விவசாயிகள் நேரடியாக விற்று பயனடையலாம் என கலெக்டர் சுகுமார் தெரிவித்தார். *ஷேர்

error: Content is protected !!