News March 11, 2025
பக்தர்களுக்காக விரதம் இருக்கும் சமயபுரம் மாரியம்மன்

உலக புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் தன் பக்தர்களை பிள்ளைகளாக எண்ணி 48 நாட்களுக்கு பச்சை பட்டினி விரதம் மேற்கொண்டுள்ளார். கடந்த மார்ச்.9-ஆம் தேதி தொடங்கிய இந்நிகழ்வை முன்னிட்டு அடுத்து வரும் 7 வாரங்களுக்கு அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெற உள்ளது. இதுவே தமிழகத்தின் மிகப்பெரிய பூச்சொரிதல் விழாவாகும். இந்நிகழ்வில் அம்மனை காண நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தருவர். SHARE NOW!
Similar News
News May 8, 2025
திருச்சி: தமிழக வனத்துறையில் வேலைவாய்ப்பு

தமிழக வனத்துறையில் காலியாக உள்ள 257 வனக் காவலர், வனக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 18 முதல் 32 வயது வரை உள்ள, 10th, 12th முடித்தவர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கவும். சம்பளமாக மாதம் ரூ.16,600 முதல் ரூ.57,900 வரை வழங்கப்படும். அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு இதை SHARE செய்யவும்!
News May 8, 2025
திருச்சி மாவட்ட எம்.எல்.ஏ-க்கள் செல்போன் எண்கள் (பாகம்-2)

மணப்பாறை – அப்துல் சமது (9500062790)
லால்குடி – ஏ. சௌந்தரபாண்டியன் (9942235277)
மண்ணச்சநல்லூர் – எஸ். கதிரவன் (9842475656)
முசிறி – என். தியாகராஜன் (9443838388)
ஸ்ரீரங்கம் – பழனியாண்டி (9443789999)
துறையூர் – எஸ்.ஸ்டாலின் குமார் (9787815511). SHARE செய்யவும்!
News May 8, 2025
திருச்சி மாவட்டத்தில் 231.4 மி.மீ மழை பதிவு

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக திருச்சி மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதில் நேற்றைய தினம் (மே.07) துறையூர் பகுதியில் அதிகபட்சமாக 45 மி.மீ, சிறுகுடியில் 30.2 மி.மீ, கு
புள்ளம்பாடியில் 28.4 மி.மீ மழை பதிவாகியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் மொத்தமாக 231.4 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.