News August 16, 2024
நேருக்கு நேர் மோதிய விபத்தில் 10 பேர் காயம்

கரூரைச் சேர்ந்தவர்கள் ராமேஸ்வரம் கோயிலில் தரிசனம் முடித்து இன்று மாலை ஊர் திரும்பினர். மண்டபம் முகாம் பூந்தோன்றி காளி அம்மன் கோயில் அருகே சென்றபோது பெங்களூரிலிருந்து ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்த கார் நேருக்கு நேர் மோதியது. இதில் குழந்தை உட்பட 10 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் 10 பேரும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இது குறித்து மண்டபம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News October 13, 2025
ராம்நாடு: நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம் இல்லை

இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் நாளை 14/10/2025 அன்று உங்களுடன் ஸ்டாலின் முகம் நடைபெறவில்லை. புதிய குடும்ப அட்டை, பட்டா மாறுதல், வருமான வரி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் போன்ற எண்ணற்ற சேவைகளை தமிழ்நாடு முதல்வர் உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஒன்று தொடங்கி வைத்தார். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர். பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அமைந்தது .நாளை முகம் இல்லை.
News October 13, 2025
ராம்நாடு: மக்கள் குறை தீர் கூட்டம் அறிவிப்பு

திருவாடானை வட்டாரப் பகுதிகளில் வரும் (அக். 14) மற்றும் 15ம் தேதிகளில் உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற தலைப்பில் மக்களின் குறைகளை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் திருவாடானை ஊராட்சி அலுவலகத்தில் நடைப்பெற உள்ளது. திருவாடானை, மங்களக்குடி, தொண்டி, புல்லூர் ஆகிய தாலுகா மனுக்கள் மண்டல துணை தாசில்தார் ராமமூர்த்தி தலைமையில் பெறப்படுகிறது. பொதுமக்கள் இந்த முகாமை பயன்படுத்தி கொள்ளவும். SHARE
News October 13, 2025
ராம்நாடு: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்

மனித உரிமைகள் ஆணையம் – 22410377
போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832
குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
முதியோருக்கான அவசர உதவி -1253
தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
கடலோர பகுதியில் அவசர உதவி-1093
ரத்த வங்கி – 1910
கண் வங்கி -1919
விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989