News March 24, 2025
நேருக்கு நேர் பைக்குகள் மோதி விபத்து

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த வி.பாளையத்தை சேர்ந்தவர் சண்முகம், 35; இவர், நேற்று மாலை தனது பைக்கில் கூகையூர் சாலையில் சென்றுகொண்டிருந்தார், அப்போது கடலுார் மாவட்டம், வேப்பூரை சேர்ந்த வேலுசாமி, 34; என்பவர் ஓட்டி வந்த பைக், சண்முகம் பைக் மீது நேருக்கு நேர் மோதியது. இதில், படுகாயமடைந்த சண்முகம், கள்ளக்குறிச்சி அரசுமருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
Similar News
News March 25, 2025
கள்ளக்குறிச்சியில் இன்று இரவு ரோந்து போலீசார் விவரம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (25.03.2025) இரவு 10 மணி முதல் நாளை (26.03.2025) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர கால தேவைக்கு பொதுமக்கள் உட்கோட்ட அதிகாரியை தொடர்புகொள்ளலாம் அல்லது 100 அழைக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகம் அறிவித்துள்ளது.
News March 25, 2025
உங்கள் கைரேகையை பதிவு செஞ்சிட்டீங்களா?

தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவரும் தங்களுடைய கைரேகையை கட்டாயம் ரேசன் கடைகளில் உள்ள இயந்திரத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதற்காக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மார்ச் 31-ஆம் தேதி வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. அதற்குள் குடும்ப அட்டை வைத்துள்ள அனைவரும் தங்களின் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். ஷேர் பண்ணுங்க
News March 25, 2025
பைக்கில் புகுந்த பாம்பு

உளுந்துார்பேட்டை அடுத்த செம்மணங்கூர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீராம் (45). இவர், ஸ்பிளண்டர் பைக்கை, உளுந்துார்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே நிறுத்தி விட்டுச் சென்றார். மீண்டும் வந்து பார்த்தபோது, பைக்கில் இரண்டடி நீளமுள்ள பாம்பு இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். தகவல் அறிந்த உளுந்துார் பேட்டை தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, பைக்கில் இருந்த பாம்பை மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.