News November 5, 2024

நேரில் சென்று காரணத்தை கேட்டறிந்த ஆட்சியர்

image

விளாம்பாக்கம் பேரூராட்சியில் சின்ன உப்புப்பேட்டை சாலை அருகே பேரூராட்சியின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமையவுள்ள பகுதியில் சாலையோரம் உள்ள நீர்நிலை புறம்போக்கில் குடியிருந்து வரும் 10 இருளர் இன குடும்பத்தினர் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மாற்று இடத்திற்கு குடி பெயராமல் இருந்துள்ளனர். இந்தநிலையில், அங்கு சென்ற ஆட்சியர் சந்திரகலா இடம் பெயராதது குறித்து சம்மந்த பட்டவர்களிடம் கேட்டறிந்தார்.

Similar News

News August 27, 2025

ராணிப்பேட்டை: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

image

தமிழ்நாடு இணையம் சார்ந்த தற்சார்புத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் (Gig Workers Welfare Board) பதிவு செய்துள்ள 2,000 உறுப்பினர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதை பெற <>இங்கே<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் கூடுதல் தகவல்களுக்கு மாவட்ட தொழிலாளர் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தை நேரடியாக அணுகலாம். தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 27, 2025

ராணிப்பேட்டை: மறக்காம.. இத பண்ணுங்க

image

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி ராணிப்பேட்டை சோளிங்கரில் உள்ள கமல விநாயகர் கோயிலில் இன்று காலை 10.30 மணி முதல் 12 மணிக்குள், மாலை 5 மணி முதல் 6 மணிக்குள் பூஜை செய்தால் துன்பங்கள், தடைகள் நீங்கி நன்மைகள் அதிகரிக்கும் என்பது ஐதீகம். ( விநாயகர் அருள் பெற SHARE பண்ணுங்க)

News August 27, 2025

விநாயகருக்கு 1008 கொழுக்கட்டையால் அர்ச்சனை

image

ராணிப்பேட்டை, ரத்தினகிரி பகுதியில் அமைந்துள்ள ரத்தினகிரி பால முருகன் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகருக்கு 1008 கொழுக்கட்டையால் அர்ச்சனை வழிபாடு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளி கவச அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து 1008 கொழுக்கட்டைகளால் அர்ச்சனை செய்யப்பட்டது.

error: Content is protected !!