News February 11, 2026

நெல் கொள்முதல் மற்றும் இயக்கம் செய்யும் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்

image

நாகை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பிப்.10 இன்று எம்எஸ் எஸ் 2026 சம்பா பருவத்தில் நெல் கொள்முதல் மற்றும் இயக்கம் செய்யும் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு செயலாளர் கே எஸ் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குநர் ஆ.அண்ணாதுரை,ஆட்சியர் ப .ஆகாஷ் முன்னிலையில் இன்று (பிப்.10) நடைபெற்றது.

Similar News

News February 13, 2026

நாகை: ரூ.5 லட்சம் காப்பீடு! APPLY NOW

image

மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் வருடத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கும் PM-JAY திட்டம் செயல்பட்டு வருகிறது. உங்கள் குடும்பத்தில் அவசர மருத்துவ தேவைக்கு பணம் பெற இனி அலைய தேவையில்லை. PM-JAY செயலியில் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து அவசர கால மருத்துவ செலவை பூர்த்தி செய்யலாம். இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய <>இங்கே கிளிக் <<>>செய்யவும். திட்டம் குறித்து தெரியாதவர்களுக்கு Share செய்து தெரியப்படுத்துங்கள்.

News February 13, 2026

நாகயில் 273 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

image

கீழையூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட திருப்பூண்டி சாலையில் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் தலைமையில் போலீசார் வாகன சோதனை ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த சொகுசு காரை சோதனை செய்தில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரிய வந்தது. பின்னர் காரில் பயணித்த 3 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து 2.80 லட்சம் மதிப்பிலான 273 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

News February 13, 2026

நாகை அருகே சோகம்: ஏழ்மையால் பறிபோன உயிர்..

image

கீழ்வேளூர் போலீஸ் சரகம், திருக்கண்ணங்குடி சின்ன முக்கால் வட்டம் பகுதியை சேர்ந்தவர் ஹரிஹரன். மீன் லோடு ஏற்றும் வேலை பார்க்கும் இவர், தனது வீட்டில் கூரை போட பணம் இல்லாமல் குழந்தைகள் பனியில் தூங்குவதாக புலம்பி வந்துள்ளார். இதில் மனமுடைந்த ஹரிஹரன் தனது கூரை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!