News January 19, 2026
நெல்லை: Spam Calls-க்கு இனி ‘END கார்டு’!

நெல்லை மக்களே, தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் நிகழ்வுகள் நடக்கின்றன. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
Similar News
News February 13, 2026
மாவட்டத்தில் இரவு பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் விபரம்

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசன்ன குமார் உத்தரவின் படி நெல்லை மாவட்டத்தில் இன்று (பிப்.13) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.
News February 13, 2026
மாநகரில் இரவு காவல் உதவிக்கு பணி அதிகாரிகள் விபரம் அறிவிப்பு

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவின்படி இன்று பிப்ரவரி 13ம் தேதி இரவு முதல் நாளை காலை 6 மணி வரை நெல்லை மாநகரப் பகுதியில் போலீஸ் சரகம் வாரியாக காவல் பணியில் இருக்கும் அதிகாரிகள் விபரத்தை மாநகர காவல் துறை இன்று இரவு வெளியிட்டுள்ளது. அவரது கைபேசி எண் விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. காவல் உதவிக்கு இவர்களை தொடர்பு கொள்ளலாம்.
News February 13, 2026
நெல்லை இளைஞரிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்த பெண்கள்

நெல்லையை சேர்ந்த அஜித்குமார் (27) என்பவரிடம் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜலெட்சுமி, சரோஜினி ஆகிய இருவரும் அரசின் சுகாதார துறையில் அஜித்குமாருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி, ரூ.8,00,000 பணத்தைப் பெற்று ஏமாற்றியுள்ளனர். அஜித்குமார் அளித்த புகாரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சரோஜினி, ராஜலட்சுமி ஆகிய இருவரையும் இன்று கைது செய்தனர்.


