News October 11, 2025

நெல்லை: 8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

image

மேலப்பாளையத்தை சேர்ந்த 8 வயது சிறுமிக்கு கடந்த ஆண்டு முதியவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மேலப்பாளையத்தைச் சேர்ந்த முகமது அலி என்பவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு நெல்லை போக்சோ கோர்ட்டில் நடந்தது. நீதிபதி சுரேஷ்குமார் குற்றம் சாட்டப்பட்ட முகமது அலிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை நேற்று விதித்தார்.

Similar News

News October 11, 2025

நெல்லை: அரசு மருத்துவமனையில் இவை இலவசம்!

image

நெல்லை அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ்
இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் நெல்லை மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 0462-2573129 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க.

News October 11, 2025

திருநெல்வேலி மாவட்டத்தில் 24 செ.மீ மழை பதிவு

image

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று பிற்பகலில் மாநகர் மட்டுமல்லாத புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்தது. அதிகபட்சமாக மணிமுத்தாறில் 69 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதேபோன்று சேர்வலாறு அணை பகுதியில் 85 மில்லி மீட்டர் மழை கண்ணாடியின் கால்வாய் பகுதியில் 44 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. ஒட்டுமொத்தமாக திருநெல்வேலி மாவட்டத்தில் 248 மில்லி மீட்டர் மழை அதாவது 24 சென்டிமீட்டர் அளவிற்கு மழை பதிவு.

News October 11, 2025

கவின் கொலை வழக்கு. எஸ்ஐ ஜாமீன் மனு தள்ளுபடி

image

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுக மங்கலத்தைச் சேர்ந்த பொறியாளர் கவின் செல்வ கணேஷ் கடந்த ஜூலை 27ம் தேதி பாளையில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் போலீசார் KTC நகர் சுர்ஜித் அவரது தந்தை எஸ்ஐ சரவணன், சுர்ஜித் பெரியம்மா மகன் ஜெயபாலை கைது செய்தனர். எஸ்ஐ சரவணன் 2வது முறையாக ஜாமின் கேட்டு மாவட்ட 2வது கூடுதல் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.நீதிபதி ஹேமா விசாரணை நடத்தி சரவணன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.

error: Content is protected !!