News January 10, 2026
நெல்லை: 6 வயது சிறுவனுக்கு முதியவர் பாலியல் தொல்லை

அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுவனிடம் கடந்த 2023-ஆம் ஆண்டு, பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்ட அதே பகுதியை சேர்ந்த, 65 வயது முதியவர் நமச்சிவாயம் என்பவர் கைதாகினர். அவருக்கு நேற்று (ஜன.9) போக்சோ நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார் ஆயுள் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு, அரசு சார்பாக ரூ.3 லட்சம் வழங்கிடவும் உத்திரவிட்டார்.
Similar News
News February 11, 2026
நெல்லை: திருமணம் ஆகவில்லையா? – இங்க போங்க

நெல்லை மாவட்டம், சிங்கிகுளம் சமண மலையில் சப்த கன்னியர், சப்தரிஷி ஆலயம் அமைந்துள்ளது. திருமணம் ஆகாத ஆண்கள் சப்த கன்னியையும், பெண்கள் சப்தரிஷியையும் தொடர்ந்து வணங்கினால் திருமணம் ஆகும் என்பது ஐதீகம். ஆகவே திருமணம் தள்ளிப் போகுதே என கவலைப்படாமல் சிங்கிகுளம் சமண மலையில் உள்ள சப்தரிஷியை பெண்களும், சப்த கன்னியரை ஆண்களும் சென்று வணங்குங்கள் விரைவில் திருமணம் நடக்கும். *மற்றவர்களுக்கும் பகிரவும்*
News February 11, 2026
நெல்லை: சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; முதியவருக்கு சிறை

நெல்லை மாவட்டத்தில் 2021ம் ஆண்டு சுப்பிரமணியன் (72) என்பவர் 5 மற்றும் 6 வயதுடைய 2 சிறுமிகளிடம் பாலியல் தொல்லை செய்துள்ளார். இது குறித்து குழந்தைகளின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அம்பை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர். இந்த வழக்கை நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் விசாரித்து சுப்பிரமணியனுக்கு 5 ஆண்டு சிறை, ரூ.2000 அபராதம் விதித்தார்.
News February 11, 2026
திருநெல்வேலி: Whatsapp மூலம் ரூ.15 லட்சம் மோசடி!

பாளை பெருமாள்புரத்தைச் சேர்ந்த 65 வயது முதியவர் அனல் நிலையத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றார். இவரது வாட்ஸ்ஆப்-ல் மர்ம நபர் டிஜிட்டல் அரெஸ்ட் என பேசி ரூ.15 லட்சத்தை பறித்தார். இது குறித்து நெல்லை சைபர் க்ரைம் போலீசார் விசாரித்து தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த சித்தார்த்தா(26) அவரது தந்தை சீனிவாசன்(65), சாய் கிரண்(36) ஆகியோரை நேற்று கைது செய்தனர். *Awareness* ஷேர் பண்ணுங்க.


