News January 7, 2025
நெல்லை 5336 ரவுடிகள் மீது நடவடிக்கை

திருநெல்வேலி மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளது என்றும், 2024 ஆம் ஆண்டில் 5336 ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் இன்று தகவல் தெரிவித்துள்ளார். இதில் 23 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 2023ஆம் ஆண்டை விட 2024ஆம் ஆண்டில் கொலை வழக்கு 21 சதவீதம் குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 29, 2026
நெல்லை மக்களே, இந்த எண்கள் முக்கியம்! SAVE பண்ணுங்க..

உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு, கடை திறப்பு தாமதம் போன்ற புகாருக்கு உடனே கால் பண்ணுங்க.
1.நெல்லை – 9445000380
2.பாளை – 9445000381
3.நாங்குநேரி- 9445000387
4.ராதாபுரம்- 9445000388
5.அம்பை- 9445000386
இப்பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.
News January 29, 2026
நெல்லை: பைக் மோதி ஒருவர் உயிரிழப்பு

நெல்லை டவுன் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் (60). இவர் தனியார் பல் மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றி வந்தார். டவுன் பகுதி சாலையில் நடந்து சென்ற போது பைக் மோதி படுகாயமடைந்தார். நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
News January 29, 2026
FLASH நெல்லை தொகுதி வேட்பாளர்; நயினார் சூசகம்!

நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரனிடம் நெல்லை தொகுதியில் மீண்டும் போட்டியிடுவீர்களா என கேள்வி எழுப்பினர். இதுகுறித்து பேசிய அவர், நெல்லையில் (2001 – 2021) 5 முறை போட்டியிட்டதாகவும், நெல்லைக்கும், எனக்குமான உறவை பிரிக்க முடியாது என கூறினார். அதிமுக – பாஜக இடையே தொகுதி பங்கிடாத நிலையில், நெல்லையில் போட்டியிடுவது குறித்து சூசகமாக பதிலளித்துள்ளார். இதுகுறித்து உங்கள் கருத்து?


