News September 13, 2025
நெல்லை: 34 வாரங்களில் 60 பேருக்கு ஆயுள் தண்டனை

2025 ஆண்டில் இதுவரை 17 கொலை வழக்குகளில் நெல்லை மாவட்ட போலீசார் குற்றச்சாட்டுகளை நிரூபித்து தண்டனை வாங்கி கொடுத்து உள்ளனர். இதில் ஒருவருக்கு மரண தண்டனையும் 60 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கபட்டு உள்ளது. இதில் 20 பேர் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. 2025ம் ஆண்டில் இதுவரை கொலை வழக்கு கொலை முயற்சி போக்சோ வழக்குகளில் 23 சரித்திர பதிவேடு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கபட்டுள்ளது.
Similar News
News September 13, 2025
நெல்லை: அரசு வேலை பணமோசடி – தம்பதி மீது வழக்கு

பாளையங்கெட்டிகுளம் காமராஜ் நகரை சேர்ந்த அந்தோணி ராஜ் தனது மகளுக்கு அரசு வேலை வாங்குவதற்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் காட்டாங்குளியை சேர்ந்த காந்திராஜ் அவரது மனைவி உஷா ராணியிடம் 2 லட்சம் அளித்தார். அவர்கள் கூறியபடி வேலை வாங்கி தரவில்லை.பணத்தையும் அவர்கள் திருப்பி தரவில்லை. இதுக்குறித்து அந்தோணி ராஜ் பாளை தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் காந்திராஜ், உஷாராணி மீது வழக்குப்பதிவு செய்தனர்.
News September 13, 2025
நெல்லை: உங்க நீதிமன்ற CASE நிலை என்ன??

நெல்லை மக்களே! நீங்கள் புகார் அளித்த பிரச்சனைகள் வழக்குகளாகி பல வருடங்கள் ஆகி இருக்கும். இப்போது அந்த வழக்குகளின் நிலை தெரியமால் இருப்பீர்கள். இதற்காக கோர்ட் வாசலையே சுற்றுகீறிர்களா? இதை தீர்க்க ஒரு வழி உண்டு. உங்க போன்ல ECOURTS <இடைவெளி> <உங்கள் CNR எண்> என்ற வடிவில் 9766899899 எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புங்க.உங்கள் வழக்கு நிலை உடனே உங்க Phoneல! இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..
News September 13, 2025
நெல்லை: கோர்ட்டில் போலீசார் வக்கீல்கள் வாக்குவாதம்

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விஷயமாக ராக்கெட் ராஜா நேற்று ஆஜரானார். இதையொட்டி கோர்ட் வளாகத்தின் அனைத்து நுழைவாயில்களிலும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோர்ட்டுக்கு வந்தவர்கள் சோதனைக்கு பின் அனுமதிக்கபட்டனர். அப்போது கோர்ட்டுக்கு காரில் வந்த வக்கீலிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் போலீசாருக்கும் வக்கீல்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.