News September 17, 2025

நெல்லை: வேலை தேடும் இளைஞர்கள் கவனத்திற்கு!

image

நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் மாதாந்திர தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 19ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. காலை 10.30 மணிக்கு சிதம்பர நகரில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முகாம் தொடங்கும். விருப்பமுள்ள இளைஞர்கள் பங்கேற்கலாம் என மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி விளையாட்டு மைய உதவி இயக்குனர் மரிய சகாய ஆண்டனி தெரிவித்துள்ளார். *ஷேர் பண்ணுங்க

Similar News

News September 17, 2025

நெல்லை: துணை தாசில்தார் 11 பேர் பணியிடமாற்றம்

image

நெல்லை மாவட்டத்தில் துணை தாசில்தார் நிலையில் உள்ள 11 பேரை இடமாற்றம் செய்து கலெக்டர் சுகுமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி நெல்லை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் புவனேஸ்வரி கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளராகவும், நெல்லை டவுன் தண்ணி தாசில்தார் ரேகலா கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளராகவும், நெல்லை கலெக்டர் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் அனந்தபத்ரா தலைமை உதவியாளராகவும் மாற்றம்.

News September 17, 2025

நெல்லையில் நான்கு நாட்கள் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி

image

தேசிய மேம்பாட்டு நிறுவனம் மூலம் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி செப். 21, 26-28 ஆகிய 4 நாட்கள் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நெல்லை ஸ்ரீபுரம் ரோகிணி கோல்ட் அகாடமியில் நடக்கிறது. தகுதி தேவையில்லை. பயிற்சி முடித்தவர்களுக்கு இந்திய அரசு அங்கீகார சான்றிதழ் வழங்கப்படும். கட்டணம் ரூ.8,200. விவரங்களுக்கு www.rohinigoldacademy.com இல் தொடர்பு கொள்ளவும்.

News September 17, 2025

நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று [செப்.16] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் கணேசன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!