News June 4, 2024
நெல்லை: வெளியேறினார் நயினார் நாகேந்திரன்

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருவதை தொடர்ந்து நெல்லை நாடாளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சுமார் 40,000 வாக்குகளுக்கும் கீழே பின்தங்கியதால் உடனடியாக நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து அவசர அவசரமாக வெளியேறினார். இதனால் அங்கு பாஜக வாக்கு எண்ணிக்கை முகவர்கள் இடையே சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Similar News
News September 15, 2025
நெல்லை: எடப்பாடிக்கு எதிராக போஸ்டர்கள்

மதுரை விமான நிலையம் குறித்து இரு சமூகத்தினர் இடையே பிரிவினையை தூண்டி அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் எடப்பாடி பேசியதாக சொல்லபடுகிறது. அரசியல் ஆதாயம் தேடும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை வன்மையாக கண்டிக்கிறோம் என தேவேந்திரர் பண்பாட்டு கழகம் சார்பில் நெல்லை மாநகரப் பகுதி முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.
News September 15, 2025
காவல் நிலையத்தில் திருட்டு: இருவர் கைது

பணகுடி காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய வாகனங்கள் விசாரணைக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்களில் டயர்கள் திருடுபோனது தெரியவந்தது. விசாரணையில் வேல்முருகன், ராகுல் மற்றும் ஜெகதீஷ் ஆகிய 3 பேரும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. வேல்முருகன், ராகுல் இருவரையும் நேற்று கைது செய்தனர். ஜெகதீஷை தேடி வருகின்றனர்.
News September 15, 2025
நெல்லை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா??

நெல்லை மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <