News December 4, 2025
நெல்லை: வெடி தகராறில் கொலை மிரட்டல்

முனைஞ்சிபட்டியைச் சேர்ந்த ஓட்டுநர் சுந்தரவிநாயகம் (37), திருமண வீட்டுக்கு வந்திருந்த போது பிள்ளையார் கோவில் அருகே வெடி போட்ட இளைஞர்களைக் கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த பாறைக்கூட்டம் பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகன் கேசவன் அரிவாளால் வெட்ட முயன்று கொலை மிரட்டல் விடுத்தார். சுந்தரவிநாயகம் மூலைக்கரைப்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து கேசவனைத் தேடி வருகின்றனர்.
Similar News
News December 4, 2025
நெல்லை: டிகிரி போதும்., ரூ.85,000 சம்பளத்தில் அரசு வேலை ரெடி

நெல்லை மக்களே, மத்திய அரசின் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் (OICL) காலியாக உள்ள 300 Administrative Officer பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 21 – 30 வயதுக்குட்பட்ட ஏதவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச 18க்குள் இங்கு <
News December 4, 2025
நெல்லை: இளைஞரிடம் 4 கிலோ கஞ்சா பறிமுதல்

திருநெல்வேலி ராஜீவ் காந்தி நகரில் ரோந்து போலீஸார் சாக்குப்பையுடன் சந்தேகத்திற்கிடமாக நின்ற இருவரை விரட்டி பிடித்தனர். இப்ராஹிம் ரசீக் (22) என்பவரிடம் 4.1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தப்பியோடிய தங்கதுரையுடன் சேர்ந்து 5 கிலோ கஞ்சா வாங்கி 900 கிராம் விற்பனை செய்தது தெரியவந்தது. இப்ராஹிம் ரசீக்கை கைது செய்த போலீஸார் தங்கதுரையை தேடி வருகின்றனர்.
News December 4, 2025
நெல்லையில் அரசு வேலை! உடனே APPLY

திருநெல்வேலி மாவட்ட இயக்க மேலாண்மை அலகிற்கு தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்க திட்டத்தின் கீழ் காலியாக உள்ள MIS analyst என்கிற வெளி ஆதார முறைகளான ஒரு தற்காலிக பணியிடத்திற்கு மாதம் 25,000 ஊதியத்தில் பணியாற்ற வாய்ப்பு உள்ளது. பொறியியல் பட்டதாரிகள் மற்றும் மென் பொறியாளர் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.


