News January 9, 2026

நெல்லை: விஷமருந்தி பெண் தற்கொலை செய்த சோகம்..

image

நெல்லை மாவட்டம், ஹரிகேசவநல்லூரை சேர்ந்தவர் மலையாண்டி. இவரது மனைவி பேராட்சி வயது 65. இவர் உடல்நல பாதிப்பிற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். உடல் நலமாகாததால் மன உளைச்சலில் இருந்த பேராட்சி நேற்று திடீரென விஷம் குடித்து மயங்கினார். பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சேர்க்கப்பட்ட அவர் அங்கு உயிரிழந்தார். வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

Similar News

News January 26, 2026

நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று (ஜன.26) இரவு ரோந்து பணிகளில் செந்தாமரை ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் சுரேஷ் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.

News January 26, 2026

நெல்லை மக்களே உங்க போன்ல இந்த நம்பர் இருக்கா?

image

நெல்லை மக்களே, அவசர காலத்தில் உதவும் எண்கள்: 1.தீயணைப்புத் துறை – 101 2.ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 3.போக்குவரத்து காவலர் -103 4.பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 5.ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 5.சாலை விபத்து அவசர சேவை – 1073 6.பேரிடர் கால உதவி – 1077 7.குழந்தைகள் பாதுகாப்பு – 1098 8.சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 9.மின்சாரத்துறை – 1912. எல்லோரும் தெரிந்துகொள்ள உடனே SHARE பண்ணுங்க

News January 26, 2026

நாங்குநேரியில் நாளை மின்தடை அறிவிப்பு

image

நாங்குநேரி AMRL துணைமின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நாங்குநேரி, இராஜாக்கள் மங்கலம், சிறுமளஞ்சி, பெருமளஞ்சி, ஆச்சியூர், வாகைகுளம், கோவனேரி, AMRL தொழிற்கூடம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளன் அரசு தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!