News February 26, 2026
நெல்லை விரைவு ரயில்களின் சேவை மாற்றம்

எழும்பூர் ரயில் நிலைய மேம்பாட்டு பணி காரணமாக செங்கோட்டை – நெல்லை விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் நெல்லை – எழும்பூர் நெல்லை விரைவு ரயில் வரும் மார்ச் 1 முதல் 15ம் தேதி வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். எழும்பூர் – செங்கோட்டை பொதிகை விரைவு ரயில் வரும் மார்ச் 2 முதல் 16ம் தேதி வரை தாம்பரத்திலிருந்து இயக்கப்படும் என அறிவிப்பு.
Similar News
News February 27, 2026
திருநெல்வேலி: வாக்காளர்கள் கவனத்திற்கு…

நெல்லை மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!
News February 27, 2026
நெல்லை திமுகவில் இணைந்த அதிமுக நிர்வாகி

நெல்லை மாநகராட்சி முன்னாள் மாவட்ட உறுப்பினரும், மாவட்ட அதிமுக மகளிர் அணி நிர்வாகியுமான தவுலத் நேற்று மாலை பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். புதிதாக கட்சியில் இணைந்துள்ள முன்னாள் மாவட்ட உறுப்பினரை எம்எல்ஏ அப்துல் வகாப் வரவேற்றார். இந்நிகழ்வின் போது திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
News February 27, 2026
திருநெல்வேலி: 2 பேரை அரிவாளால் வெட்டிய ரவுடி

நெல்லை ரெட்டியார்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையில் பணம் தொடர்பான தகராறில், ரவுடி பேச்சிமுத்து (37) உள்ளிட்டோர் அரிவாளால் ஊழியர் சந்திரன் (49) மற்றும் டிரைவர் தளவாய்பாண்டியன் (31) ஆகியோரை வெட்டிவிட்டு தப்பினர். பெருமாள்புரம் போலீஸ் நிலையம் விசாரணையில் பேச்சிமுத்து மீது முன்கூட்டியே வழக்குகள் இருப்பது தெரியவந்தது. தலைமறைவான 5 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


