News August 15, 2025
நெல்லை: விபத்தில் ஒருவர் பலி; 15 பேருக்கு தீவிர சிகிச்சை

பாளை ஆச்சிமடத்தில் இன்று அதிகாலை டெம்போ டிராவலர் வேனும், அரசு பஸ்சும் மோதி விபத்துக்குள்ளானது. பஸ்சில் இருந்த 15க்கும் மேற்பட்ட நபர்கள் பொதுமக்களால் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாளை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வேன் ஓட்டுனர் சடலமாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். காயமடைந்த 15 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Similar News
News March 10, 2026
திருநெல்வேலி: முக்கிய எண்களை SAVE பண்ணுங்க!

நெல்லை மக்களே, உங்கள் ஏரியாவில் உள்ள குறைகளை தெரிவிக்க உங்கள் பகுதி தாசில்தார் செல்போன் நம்பரை அவசியம் சேமித்து வைத்து கொள்ளுங்கள்.
திசையன்விளை- 9384094224
சேரன்மகாதேவி- 9384094223
மானூா்- 9384094222
இராதாபுரம்- 9445000674
நாங்குநேரி- 9445000673
அம்பாசமுத்திரம்- 9445000672
பாளையங்கோட்டை- 9445000669
திருநெல்வேலி- 9445000671
இதை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க
News March 10, 2026
யானைகள் நடமாட்டம்; களக்காடு தலையணையில் குளிக்க தடை

களக்காடு புலிகள் காப்பக பகுதியில் அமைந்துள்ள தலையணை சூழல் சுற்றுலா பகுதிகளில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி களக்காடு தலையணை சூழல் சுற்றுலா பகுதியில் இன்று (10.03.2026) முதல் மறு உத்தரவு வரும் வரை சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. அதேபோல் தலையணையை பார்வையிடவும் தடை விதிக்கப்படுகிறது.
News March 10, 2026
திருநெல்வேலி: வாளை கொண்டு போலீசாருக்கு மிரட்டல்

கீழநத்தம் பகுதியைச் சேர்ந்த மாயாண்டி(30) கீழநத்தம் பகுதியில் வாளை காட்டி பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்டார். இது குறித்து தகவல் அறிந்த தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரிடம் விசாரணை நடத்த முயன்ற போது போலீசாரையும் வாளை காட்டி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் பாளை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து மாயாண்டியை நேற்று கைது செய்தனர்.


