News August 24, 2025
நெல்லை: விநாயகர் சிலைகளை கரைக்க கட்டுப்பாடு

நெல்லை டவுன் காவல் நிலையத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்து முன்னணி அமைப்பினர் கலந்து கொண்டனர் கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் பேசியதாவது: சதுர்த்தி விழா அமைதியாக கொண்டாட ஒத்துழைக்க வேண்டும். அரசு வகுத்துள்ள நிபந்தனைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத விநாயகர் சிலைகளை அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் வைக்க, கரைக்க வேண்டும்.
Similar News
News August 25, 2025
நெல்லை: 2,240 கிராம செவிலியர் பணியிடங்கள்

நெல்லை: சித்த மருத்துவ பல்கலைக்கழகத்திற்கான சட்ட மசோதாவில் கவர்னர் சுட்டிக்காட்டியுள்ள திருத்தங்களைச் சரிசெய்து, அடுத்த சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உச்ச நீதிமன்ற வழக்குகள் முடிவடைந்துள்ளதால் 2,240 கிராம சுகாதார செவிலியர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
News August 25, 2025
மாவட்டத்தில் இன்று இரவு காவல் பணி அதிகாரிகள் விபரம்

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின் படி நெல்லை மாவட்டத்தில் இன்று ( ஆகஸ்ட் 24) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.
News August 25, 2025
மாநகரில் இரவு காவல் பணி அதிகாரி விபரம்

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவின் படி நெல்லை மாநகரில் இன்று (ஆகஸ்ட் 24) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.