News November 28, 2025

நெல்லை: வாடகை வீட்டில் இருக்கீங்களா? இத பாருங்க..

image

நெல்லை மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா? சில விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
1.அட்வான்ஸ் தொகையாக 2 மாத வாடகையை மட்டுமே கொடுக்க வேண்டும்.
2.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.
3.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.
4.மீறினால் அதிகாரிகளிடம் (1800 5990 1234) என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம்.
இந்த தகவலை எல்லோருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

Similar News

News November 28, 2025

நெல்லை: வாக்காளர் பட்டியலில் 1.22 லட்சம் பேர் நீக்கம்?

image

நெல்லை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நடைபெற்று வரும் நிலையில், 5 சட்டமன்ற தொகுதிகளிலும் 1 லட்சத்து 22 ஆயிரத்து 946 வாக்காளர் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக கலெக்டர் சுகுமார் தெரிவித்தார். இதில் 69 ஆயிரம் பேர் இறந்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. இரட்டை பதிவு, நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள் போன்று விபரங்களும் தெரியவந்துள்ளது.

News November 28, 2025

பாளை சிறையில் போக்சோ கைதி உயிரிழப்பு

image

மேலப்பாளையம் குறிச்சி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (52). இவர் கடந்த ஆண்டு போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு பாளை சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு கடந்த 22ம் தேதி திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு பாளை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து பெருமாள்புரம் போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News November 28, 2025

நெல்லை அரசு அலுவலகத்தில் வேலை ரெடி

image

திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டு இருக்கும் செய்தி குறிப்பில்; திருநெல்வேலி மாவட்ட நல வாழ்வு சங்கம் மூலமாக ஊரக மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், தூய்மை பணியாளர் உள்ளிட்ட 6 வகையான பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். என்றும் 11 மாத கால ஒப்பந்த அடிப்படையில் பணிகள் நிரப்பப்பட உள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. SHARE IT.

error: Content is protected !!