News November 19, 2024
நெல்லை வருகிறார் தேமுதிக பொதுச்செயலாளர்!

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் டிசம்பர் 4 மற்றும் 5 ஆகிய இரு தேதிகளில், அரசியல் ரீதியான சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில், தேமுதிக கட்சியினர் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும், கட்சியின் கூடுதல் வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் குறித்தும் இந்த சுற்றுப்பயணத்தின்போது விவாதிக்க உள்ளதாக தகவல்..
Similar News
News November 18, 2025
மீனவ சமுதாய இளைஞர்களுக்கான போட்டி தேர்வு ஆயத்த பயிற்சி

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க மற்றும் மீனவர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள மீனவர்களின் வாரிசுதாரர்கள் குடிமைப் பணிகளில் சேர்வதற்கு ஆயத்த பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகங்களில் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து நவ.25 க்குள் வழங்க வேண்டும்.
News November 18, 2025
மீனவ சமுதாய இளைஞர்களுக்கான போட்டி தேர்வு ஆயத்த பயிற்சி

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க மற்றும் மீனவர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள மீனவர்களின் வாரிசுதாரர்கள் குடிமைப் பணிகளில் சேர்வதற்கு ஆயத்த பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகங்களில் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து நவ.25 க்குள் வழங்க வேண்டும்.
News November 17, 2025
நெல்லை: ஆசிரியர் தகுதி தேர்வு எழுதிய தந்தை, மகன்

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடைபெற்ற தகுதித் தேர்வு (டெட்) 33 மையங்களில் தேர்வு எழுத 157 மாற்றுத் திறனாளிகள் உள்பட 11,640 பேருக்கு தேர்வுக் கூட அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டிருந்தன. அவர்களில், 10,565 பேர் தேர்வை எழுதினர். பாளை தனியார் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையங்களில் தந்தையும் மகனும் தேர்வு எழுதினர். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவகுமார் ஆய்வு செய்தார்.


